Advertisment

ராஜ்கிரண் செய்த துரோகம் : நான் தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன் : ராமராஜன் ஓபன் டாக்

ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரிக்க நான் தான் அவருக்கு கால்ஷீட் கொடுத்தேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

author-image
WebDesk
New Update
ramarajan Rajikiram

ராமராஜன் - ராஜ்கிரண்

மக்கள் நாயகன் ராமராஜன், நடிப்பில் சமானியன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ராஜ்கிரண் குறித்தும் அவருடனான மோதல் குறித்தும் ராமராஜன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisment

80-90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் நாயகன் என்று அழைக்கப்பட்ட நிலையில், ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவரின் படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளது. தனக்கென தனி பாணியை வகுத்து, இன்றையக்கும் ராமராஜன் கலர் என்ற ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய இவர், அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில் தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிக்காக, பல யூடியூப் சேனல்களுக்கு ராமராஜன் பேட்டி அளித்து வருகிறார். இதில் ஒரு பேட்டியில், நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட ராஜ்கிரணுடன் ஏற்பட்ட மோதல் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரிக்க நான் தான் அவருக்கு கால்ஷீட் கொடுத்தேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு திருமணம் ஆகியிருந்த புதிதில் தயாரிப்பாளர் டி.கே.போஸ் தயாரிப்பில், என்னை விட்டு போகாதே என்ற படத்தில் நடித்திருந்தேன். ராஜ்கிரண் டி.கே.போஸ் இருவரும் நண்பர்கள் என்பதால் இருவரும் இணைந்து ஒருமுறை என்னை வீட்டில் சந்தித்தனர்.

அப்போது ராஜ்கிரண் சில படங்களுக்காக கடன் வாங்கி கஷ்டப்படுவதாகவும், அவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவுமாறு சொன்னார். அதற்கு நானும் சம்மதம் சொன்னதால், ராஜ்கிரண் எனக்கு அட்வவான்ஸ் கொடுத்தார். அப்போது உருவான படம் தான் ராசாவே உன்னை நம்பி படம். இந்த படத்தில் வரும் சீதைக்கொரு ராவணன் தான் தீக்குளிக்க என்ற பாடலை ராஜ்கிரண் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் விட்டுவிட்டேன்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது என்னிடம் கை கொடுத்த ராஜ்கிரண், சிராஜ் தான் இயக்குனர். அடுத்த படத்தின் பெயர் என்னை பெத்த ராசா என்று சொன்னார். இந்த டைட்டிலை கேட்டவுடன் ஷாக் ஆகி நின்றேன். இசையமைப்பாளர் யார் என்று கேட்டேன். இளையராஜா என்றவுடன் உடனாடியாக ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு இந்த படத்தின் 2 நாயகிகள் என்று சொன்னார்கள். என்ன என்று விசாரித்தபோது ஒருவரை காதலித்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று சொன்னார் இயக்குனர்.

நான் வாழ்க்கையில் ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்துகொண்டேன் இது நமக்கு செட் ஆனாது கதையை மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதன்பிறகு மாற்றப்பட்டு அந்த படம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு பெத்தவ மனசு என்று ஒரு படத்தை ராஜ்கிரண் தயாரித்தார். அந்த படத்தில் இயக்குனராக தனது பெயரை போட்டுக்கொள்ள ராஜ்கிரண் விரும்பினார்.

எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் வேறு பட வாய்ப்பு கிடைத்து கிளம்பி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் படமும் பாதியில் நின்றுவிட்டது. அதன்பிறகு எனக்கு சில படங்கள் ட்ராப் ஆனபோது, ராஜ்கிரண் மீண்டும் பெத்தவ மனசு படத்தை கையில் எடுத்து கஸ்தூரி ராஜா இயக்குனர் என்று சொல்லி இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டுள்ளார்.

அவர் படத்தை எடுத்து வாருங்கள் இசைமைக்கிறேன் என்று சொல்ல, ராஜ்கிரண் இளையராஜாவுக்கு படத்தை போட்டு காட்டினார். படம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. .ஆனால் அந்த படத்தை ராஜ்கிரண் வெளியிடவில்லை. அதற்கு காரணம் நான் மீண்டும் மேலே வந்துவிடுவேன் என்பதால் வெளியிடாமல் விட்டுவிட்டார். இதுதான் நடந்தது. ராஜ்கிரண் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான்தான் அவருக்கு இரண்டு படங்கள் கொடுத்தேன் என் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ramarajan Actor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment