/indian-express-tamil/media/media_files/BE11ENuzMLhtmdHixoVq.jpg)
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் பலரின் மனதை வென்ற நடிகர் செந்தில், ஒரு விபத்தில் தான் உயிர் பிழைத்தது குறித்து உருக்கமான ஒரு பேட்டியில் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், எல்லா காலக்கட்டத்திலும், ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகர்களில் செந்தில் கவுண்மணிக்கு தனி இடம் உண்டு. தொடக்கத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியாக காமெடியில் கலக்கி வந்தாலும், 1982-ம் ஆண்டு வெளியாக அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை என்ற படத்தின் மூலம் கவுண்மணியுடன் இணைந்து நடிக்க தொடங்கினார்.
அதன்பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில், நாட்டாமை, கரகாட்டக்காரன், மகாபிரபு, வைதேகி காத்திருந்தால் உள்ளிட்ட பல படங்களில் இவர்களின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் இன்றும் ரசிக்கப்படும் காட்சிகளாக உள்ளது. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.
பெரும்பாலும் படங்களில் கவுண்மணியிடம் அடி வாங்கும் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், தனது தனித்துவமான நடிப்பு, அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள், காமெடி காட்சியில் கவுண்மணியை மாட்டிவிட்டுவிட்டு தப்பிச்செல்வது என செந்தில் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில், செந்தில் நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய, செந்தில், தான் சந்தித்த விபத்து குறித்து பேசியுள்ளார். நான் எப்போதும் காரை அதிவேகமாக ஓட்டுவேன் என்னுடன் காரில் வருபவர்கள் கூட பயந்துவிடுவார்கள். ஆனால் எனக்கு டிரைவர் இருக்கிறார். அவர் இல்லாத சமயத்தில் நான் கார் ஓட்டி செல்வேன். அப்படி ஒருமுறை டிரைவர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதால் ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது ஷூட்டிங்கிற்கு வருமாறு போன் வந்தது.
நான் காலை 3 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு சென்றேன். இடையில் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். அப்போது கார் தடம்புறண்டு, வயல்வெளிகளில் ஓடி ஒரு வேப்பமரத்தில் மோதி நின்றது. காரின் இரு பக்க கதவுகளும் விழுந்துவிட்டன. அந்த வழியாக லாரியில் வந்த சிலர் என்னை காப்பாற்றினார்கள். இந்த விபத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று செந்தில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.