/indian-express-tamil/media/media_files/Tt0Ah0f6x33IsKgmqPjm.jpg)
போடா போடி படத்தில் சிம்பு - வரலட்சுமி
நடிகர் சிம்பு நடிகை வரலட்சுமி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து இருவருமே விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, கமல்ஹாசன் தயாரிப்பில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், தமிழில் நாயகியாகவும், தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாகவும் முத்திரை பதித்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்பு – வரலட்சுமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தனது பிறந்த நாளான பிப்ரவரி 3-ந் தேதி திருமணம் குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை வைத்து சிம்பு வரலட்சுமி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் டி.ராஜேந்திரன் மகன் என்ற வாரிசு அடையாளத்துடன் சிம்புவும், சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் வரலட்சுமியும் சினிமாவுக்கு நுழைந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.
அதேபோல் டி.ராஜேந்தர் – சரத்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த திருமணம் சாத்தியமாககும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த தகவல்கள் குறித்து இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் நான் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிம்புவுக்கும் எனக்கும் திருமணம் இல்லை. அவர் என் நண்பர் என்று கூறியுள்ள வரலட்சுமி சரத்குமார் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வரலட்சுமி தற்போது கலர்ஸ் என்ற மலையாள படத்திலும், சபரி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.