Advertisment

ரஜினிகாந்துடன் ஒப்பீடு... பாலிவுட் அறிமுகம்... சிவகார்த்திகேயன் கூறுவது என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள மாவீரன் படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்துடனான தற்போதைய ஒப்பீடு கூறித்து மனம் திறந்து பேசியுள்ளார்

author-image
WebDesk
New Update
Maaveeran

சிவகார்த்திகேயன் மாவீரன்

சினிமாவை பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகை பழம்பெரும் நடிகருடன் ஒப்பிடுவது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. இந்த வாரிசையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். தமிழ் ரசிகர்கள் ஹீரோக்களை அடக்கத்தின் உருவமாக பார்க்கிறார்கள். திரையில் அதிரடி ஆக்ஷனையும் ரியல் லைஃபில் அமைதியின் சுரூபமாகவும் பாக்க விரும்புகிறார்கள்.

Advertisment

அந்த வரிசையில் எப்போதும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு முதலிடம் உண்டு. ரஜினிகாந்த் திரையில் எதிரிகளை பந்தாடுவது, பலருக்கும் உதவுவது தவறு செய்வது பெண்களாக இருந்தாலும் அவர்களை தட்டி கேட்பது என ஆக்ஷனில் அதகளம் செய்தாலும் தனது ரியல் லைஃபில் எவ்வித பில்டப்பும் இல்லாமல் அமைதியான தனது ரியல் தோற்றத்துடனே வெளியில் வந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நடிகர்களிடம் பணிவு எதிர்பார்ப்பது இன்றைய ரசிகர்களின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது.

அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல ஸ்கோர் செய்து வருபவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ரஜினிகாந்தி பழைய படங்களில் ஒன்றாக மாவீரன் என்ற டைட்டிலை தனது படத்திற்கு பயன்படுத்தியுள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இந்த படத்தில் நடித்த மிஷ்கின் மற்றும் நடிகை சரிதா ஆகியர் சிவகார்த்தியனை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது தொடர்பான விவாதம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், 'அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றும் நடிகை சரிதா சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்டது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "சரிதா மாம் ரஜினி சாருடன் நெற்றிக்கண் (1981) படத்தில் நடித்துள்ளார். அப்போதைய ரஜினி சார் போல என் எனர்ஜியும் தோற்றமும் உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் நான் ரஜினி சார் என்று அவர் சொல்லவில்லை. இதேபோல், மிஷ்கின் சார் எனது பணிவை அவருடன் (ரஜினிகாந்த்) ஒப்பிட்டு, நான் ரஜினி சார் போலவே அடக்கமானவன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு மேல் எதுவும் இல்லை." இப்போது, சரிதா மற்றும் மிஷ்கினுக்கு நன்றி கூறுவது சிவாவுக்கு எளிதாக இருந்தாலும் அவர்களது பாராட்டை நாகரீகமாக மறுப்பது தமிழ் ரசிகர்கள் விரும்பும் ஒரு அடக்கமான குணமாக பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், நடுவழியில் தாமதமாக வருபவர்களை வரவேற்பு அவர்களுக்கு கைகுலுக்கி மரியாதையுடன் நடந்துகொண்டார். அடக்கமாக இருப்பதற்கு பொறுமை ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம். அதற்கு மேல், ரஜினிகாந்திற்கும் சிவாவுக்கும் மற்றொரு ஒற்றுமை உள்ளது. ஆன்மீகத்தின் வெளிப்படையான காட்சியாக நடிகர் தனுஷைப் போலவே சிவாவும் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். அதைப் பற்றி கேட்டபோது, ​​சிவா அதன் உள் அர்த்தத்தை மறுத்து“இது என் மருமகனின் பரிசு. நான் அதை ஒரு நாள் கழற்றினால் கூட அவர் ஒப்புகொள்ள மாட்டார் அதனால் தான்  நான் அதை எல்லா நேரத்திலும் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சு மெதுவாக மாவீரன் படத்தை நோக்கிச் செல்லும்போது, முதலில் இயக்குனர் மடோன் அஷ்வினுடன் இணைந்ததற்காக காரணத்தை கூறிய சிவா, அவரது முதல் படமான மண்டேலாவைப் பார்த்து நான் வியந்தேன். இது மிகவும் வேடிக்கையான படம் தான் என்றாலும்,ஒரு அற்புதமான தகவலை சொன்ன அரசியல் நையாண்டி படம். படத்தைப் பார்த்த உடனே இயக்குனருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன், அவரிடம் கதை கேட்ட போது மாவீரன் கதையை சொன்னார். மாவீரன் படத்தைத் தொடங்கியபோது மண்டேலாவுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. மாவீரன் என்ற இந்த கதையில் நான் காமிக் கலைஞனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாவீரன் படத்தின் டிரெய்லர் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். சத்யா கேரக்டர் ஒரு இடத்தில் இருக்கும் போதெல்லாம் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருப்பார், மேலும் செய்தித்தாளில் செய்யும் நகைச்சுவைக்கும் யதார்த்தத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. சத்யாவின் காமிக்ஸுக்கும் உண்மையில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன, எப்படி என்பது தான் படத்தின் கதை என்று கூறியுள்ளார்.

மாவீரன் படத்திற்கு உதவுவதற்காக உங்கள் சம்பளத்தை குறைத்ததாக செய்திகள் வெளியாகின. ஒரு படத்தின் தயாரிப்பு அம்சத்தில் ஏன் ஈடுபடுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ​“இந்த சூழ்நிலையை கடந்து செல்லாத எந்த ஹீரோவும் இந்த துறையில் இல்லை. அப்படிப்பட்ட அமைப்பில் சிக்கித் தவிக்கிறோம். பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த ரஜினி முருகன் படத்தில் நடித்தேன். இன்றுவரை அதற்கான சம்பளம் எனக்கு கிடைக்கவில்லை. அதேபோல இன்னொரு பெரிய புரொடக்ஷன் ஹவுஸ்லயும் சேர்ந்து படம் பண்ணேன். பணத்தைப் பெற நான் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. எனக்காக நிற்க இங்கே யாரும் இல்லை, நானே அதைச் செய்ய வேண்டும்.

இது எனது சம்பளத்தைப் பற்றியது அல்ல,மடோன் அஷ்வினின் மண்டேலா திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை, எனவே அவரது மார்க்கெட் நிலவரத்தை பற்றி எங்களுக்குத் தெரியாது. எனவே, இது ஒரு பரிசோதனை முயற்சி தான். நான் சொன்ன சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, படத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், அதை எப்படி உருவாக்க முடியும்? வேறு யாராவது இந்த சமூகப் பொறுப்புள்ள எடுத்திருந்தால் நான் இதை செய்திருப்பேனா என்பது தெரியாது. மாவீரன் படத்தில் யாரும் நீண்ட டயலாக்குகள் பேச மாட்டார்கள். படம் முடிவதற்குள், நிச்சயமான இந்த படம் உங்களை திருப்திபடுததும். மண்டேலா தனிப்பட்ட பொறுப்பு பற்றி இருந்தால், மாவீரன் சரியாக வரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படடுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் விழாவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக கேட்ட கேள்விக்கு சிரித்தவாறு பதில் அளித்த சிவா, ஒரு தவறான தகவல்தொடர்பு இருந்தது. நான் ஒரு ஸ்ட்ரைட் பாலிவுட் படம் செய்வது போல் இருந்தது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் எனது படம் ஹிந்தியில் வெளிவருகிறதா என்று கேட்டபோது, சோனியும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து செயல்படுவதால் அதை உறுதி செய்தேன். நான் பாலிவுட்டில் அறிமுகமாகிறேன் என அவர் கூறியிருந்தார். அதற்கு மேல், அங்கு நடந்த அனைத்திற்கும் (அவருக்கு மொழி தெரியாததால்), அவர்கள் என்னைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நான் ஒரு பதில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டாலும், அவர் இன்னும் இளம் மற்றும் அறிமுக இயக்குனர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில், முன்னணி இயக்குனர்களுடன் இணைவது எப்போது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இளம் நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் புதிய இயக்குனர்களுடன் பணியாற்றுவதை ரிஸ்க் எடுப்பது போல் நினைக்கிறார்கள். ஆனால் "நான் நான் அந்த ரிஸ்க் எடுக்கவில்லை என்றால், நான் இங்கே இருக்க மாட்டேன். MBA முடித்துவிட்டு ஒரு நால்ல வேலையில் செட்டில் ஆகி இருப்பேன். இப்போதுதான் பெரிய இயக்குனர்கள் என்னை அணுகுகிறார்கள். இருப்பினும், இளைஞர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். அந்த சோதனை முயற்சி தொடரும்."

இந்த படத்தில் ஒரு சண்டை காட்சி, சுமார் 40 டேக்குகளுக்கு சென்றது. ஒவ்வொரு டேக்கிற்குப் பிறகும், சிவா ஸ்டண்ட்மேன்களிடம் மன்னிப்பு கேட்டார், ஏனென்றால் சண்டை கிட்டத்தட்ட உண்மையானது, அவர்கள் உண்மையான குத்துக்களை வாங்கிக்கொண்டிருந்தனர். நான் சிவாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன், ஒவ்வொரு டேக்கிற்குப் பிறகும் அவர் மன்னிப்பு கேட்டார். அவர் அதை செய்ய வேண்டியதில்லை. அவர் எப்படி ஒரு நல்ல மற்றும் அடக்கமான பையன் என்று நான் கேள்விப்பட்டேன், அது உண்மை என்பதை அப்போது நான் உணர்ந்தேன் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment