/indian-express-tamil/media/media_files/S5FMoDEHZAJRoA0B3sLB.jpg)
அயலான் ப்ரமோஷனில் சிவகார்த்திகேயன்
அயலான் படத்தின் தெலுங்கு ரிலீஸ்க்காக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மேடையேறிய ஒரு ரசிகர் சிவகார்த்திகேயன் மீது பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ந் தேதி வெளியானது. கருணாகரன், யோகிபாபுஉள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் ஜனவரி 12-ந் தேதி வெளியான அயலான் கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனிடையே தெலுங்கு படங்களின் ரிலீஸ் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கில் பொங்கல் தினத்தில் தமிழ் படங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஒரு வாரம் கழித்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்த சிவகார்த்திகேயன், மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மேடை ஏறிய ரசிகர் ஒருவர், சிவகார்த்திகேயனை நோக்கி பாய்ந்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர், ஒரு ஸ்டெ் பின் நகர்ந்த நிலையில், சிவகார்த்திகேயன் அருகில் இருந்த பவுன்சர்கள் அந்த ரசிகர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு அவர் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, அவரை விடுமாறு சிவகார்த்திகேயன் கூறினார்.
அதன்பிறகு, அந்த ரசிகருக்கு சிரித்த முகத்துடன், செல்பிக்கு போஸ் கொடுத்த சிவகார்த்திகேயன், மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். இந்த சமப்வம் காரணமாக மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சகஜநிலை திரும்பியது. பின்னர் படத்தின் ப்ரமோஷன் பணிக்காக சிவகார்த்திகேயன் தெலுங்கில் பேசி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.