கீழடி அருங்காட்சியத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பார்வையிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன், ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் கலந்து கொண்ட பிறகு, திரும்பி மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் கீழடி தொல்லியல் அருங்காட்சியத்திற்கு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வந்தார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழமையான பொருட்கள் மற்றும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை ஆர்வமாக பார்வையிட்டு ரசித்தனர்.
தொல்லியல் துறையினர் அவர்கள் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர். மேலும், அருங்காட்சியத்திற்கு வந்திருந்த ரசிகர்களிடம் அவர் பொறுமையாக பழகி, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.