சச்சின் பந்துவீச்சில் போல்ட்... ரெய்னாவுடன் போட்டோ : மகன், மகளுடன் கிரிக்கெட்டில் கால்பதித்த சூர்யா

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சிங்கம்ஸ் என்ற அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சிங்கம்ஸ் என்ற அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Surya wAith Raina

நடிகர் சூர்யா - சுரேஷ் ரெய்னா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் பங்கேற்ற நடிகர் சூர்யா, சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இந்தி படங்களில் கவனம் செலுத்தும் வகையில் தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ள இவர், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சிங்கம்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது சூர்யா மற்றும் அவரது குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகிய இருவருடனும் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவிய நிலையில், தற்போது இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்ச்சிக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சூர்யா பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில், சூர்யா சச்சின் பந்துவீச்சில் பேட்டிங் செய்யும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் ஆந்திரா அணியை வாங்கியுள்ள நடிகர் ராம்சரணும் இந்நிக்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருடன் இணைந்து சூர்யா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

Advertisment
Advertisements

குறிப்பாக சூர்யா பேட்டிங் செய்யும்போது சச்சின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனிடையே நடிகர் சூர்யா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள சுரேஷ் ரெய்னா அடுத்து சென்னைக்கு வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூர்ய மகள் தியா அசல் ஜோதிகா மாதிரியே இருக்கிறார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். சூரரைப்போற்று இந்தி ரீமேக், கங்குவா, வாடி வாசல், சுதா கொங்காரா படம் என பிஸியாக இருக்கும் சூர்யா தனது கங்குவா படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

actor surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: