Advertisment

வெற்றிமாறன் மீது கோபம் : வாடிவாசல் படத்தில் இருந்து விலகிய சூர்யா ; காரணம் விஜய்?

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Vetrimaran Surya

வெற்றிமாறன் - சூர்யா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்க கமிட் ஆன சூர்யா தற்போது அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும், அவரது இந்த முடிவுக்கு விஜய் தான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து, ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என தொடர் வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது விடுதலை படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி வரும் வெற்றி மாறன், படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியே நாயகனாக நடித்து வருகிறார், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், விரைவில் விடுதலை 2 படத்திற்கான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விடுதலை 2 படத்தை முடித்தவுடன், வெற்றிமாறன், அடுத்து சூர்யா மற்றும் அமீர் நடிப்பில் வாடி வாசல் என்ற படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெற்றிமாறன், விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததால், வாடிவாசல் படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அறிவிப்புக்கு பின் வாடிவாசல் படம் தொடர்பாக சில ப்ரமோ காட்சிகள் படமாக்கப்பட்மாக கூறப்பட்டது. அதே சமயம், அவ்வப்போது சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவர் வெற்றிமாறன் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், தெலுங்கு நடிகர் ராம்சரனிடம் வாடிவாசல் கதையை கூறியதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த கதையை கேட்ட ராம்சரன் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டதாகவும், இந்த தகவலை அறிந்த சூர்யா, வெற்றிமாறன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல், சமீபகாலமாக வெற்றிமாறன், கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் குறித்து பேசி வருவதால், அதை பிடிக்காத சூர்யா வெற்றிமாறன் மீது கோபத்தில் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

actor surya Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment