சூர்யா மும்பையில் குடியேறியது இதற்குதானா? வாடிவாசலுக்கு டாடா... பாலிவுட் இயக்குனருடன் கூட்டணி

மகாபாரதத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும், 2024-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மகாபாரதத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும், 2024-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Bala rejected Jyothika in Pitamaga

நடிகர் சூர்யா

சமீபத்தில் மும்பையில் குடியேறிய நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் பிஸியில் இருப்பதால் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தொடங்க தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சூர்யா அடுத்து சூரரைபோற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனிடையே சுதா கொங்கரா படத்தை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா தற்போது பாலிவுட் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக உள்ளதாகவுமு் படத்திற்கு கர்ணா என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

மகாபாரதத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும், 2024-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரத்த சரித்திரம் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆன சூர்யா 13 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். சமீபத்தில் குடும்பத்துடன் மும்பையில் குடியெறிய சூர்யா இதற்காகத்தானா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: