ரயில் நிலையத்தில் திடீர் ரெஸ்டாரண்ட்... விஜயகாந்த் செய்த மேஜிக்... என்னா மனுஷன்யா?!

மறைந்த நடிகர் விவேக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
VIjayakanth

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என்றும் அதனை சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், விஜயகாந்த் தனது சக நடிகர்களுக்கா ரயிலை நிறுத்திய சம்பவம் குறித்து நடிகர் விவேக் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலரும் நாள்தோறும் பேசி வருகின்றனர்.

Advertisment
Advertisements

அந்த வகையில் மறைந்த நடிகர் விவேக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. ஒருமுறை மதுரையில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு சென்ற நடிகர் நடிகைகள் அங்கிருந்து ரயிலில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அனைவருக்கும் பசி.

நிகழ்ச்சியில் சாப்பாடு வசதி சரியாக செய்யவில்லை. இதனால் எல்ல நடிகர்களும் சாப்பிடாமல் வருகிறார்கள். இந்த விஷயத்தை கேட்ட விஜயகாந்த், மணியாச்சி அருகில் ரயிலை நிறுத்திவிட்டார். இரவு 12 மணி இருக்கும். அந்த ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

ஆனாலும் விஜயகாந்த் ஸ்டேனுக்கு வெளியில் சென்று,அப்போ செல்போன் கூட கிடையாது. லேன்லைனில் இருந்து யார் யாருக்கோ போன் செய்து அந்த ஊரில் உள்ள ஹோட்டல் கடைக்காரர்களை வரவழைத்து உடனடியாக மணியாச்சி ஸ்டேஷன்லே ஒரு பப்வே சிஸ்டத்தை தொடங்கினார்.

அதில் எல்லாருக்கும் பரோட்டா, சால்னா, இட்லி, தோசை எல்லாம் செய்துகொடுத்து எல்லாரையும் சாப்பிட வைத்து அதன்பிறகு சென்னைக்கு அழைத்து வந்தார். விஜயகாந்த் செயல்படக்கூடிய ஒரு நல்ல மணிதர்.நல்ல தலைவர் என்று கூறியுள்ளார். விவேக்கின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: