உண்மைக்கு நெருக்கமான சீரியல் இப்போது இல்லை - நடிகை அபிதா கருத்து

Tamil Serial Update : கணவன் இறந்த பிறகு தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரமும் அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது தான்.

Tamil Serial Update : கணவன் இறந்த பிறகு தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரமும் அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது தான்.

author-image
WebDesk
New Update
உண்மைக்கு நெருக்கமான சீரியல் இப்போது இல்லை - நடிகை அபிதா கருத்து

Tamil Serial Update : 1997-ம் ஆண்டு வெளியான எட்டுப்பட்டி ராசா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிதா. தொடர்ந்து சேது படத்தில் விக்ரம்-க்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்ற அவர், தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்ளில் நடித்தள்ளார். தமிழில் கடைசியாக 2007-ம் ஆண்டு வெளியான நம்நாடு படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

அதன்பிறகு 15 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தீ இவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம், 2019-ம் ஆண்டு சன்டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த இவர் தற்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழின் மாரி என்ற சீரியல் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபிதா லாக்டவுன் காலத்தில் கொரோனா தொற்று காரணமாக நடிப்பது குறித்து சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் நடிக்க வந்துள்ளதாக கூறியுள்ள அபிதா, மாரி சீரியலில், ​​“நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல், தன் இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பவள். வாழ்க்கையில் முன்னேற போராடுகிற கேரக்டர். இந்த கேரக்டரில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், கணவன் இறந்த பிறகு தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரமும் அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது தான்.

இன்று தொலைக்காட்சியில் அதிக நகைச்சுவைத் தொடர்கள் வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முன்பெல்லாம் சின்னப்பா பெரியப்பா போன்ற நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று, அத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதில்லை. மேலும், சில சீரியல்கள் மிகவும் உண்மைக்கு மாறானவையாக இருப்பதாக தோன்றுகிறது.

Advertisment
Advertisements

சில சீரியல்களில் பெண்கள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, மிகவும் மேக்கப்புடன், தங்கள் வீடுகளுக்குள் பட்டுப் புடவைகள் மற்றும் நகைகளை அணிவார்கள். ஆனால் ரியல் லைப்பில், பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் மேக்கப் போட்டு பட்டுப் புடவை அணிகிறார்களா? சீரியல்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் முடிந்தவரை தொடர்புபடுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

கலைஞர்களாகிய நாங்கள் எப்பொழுதும் முடிந்தவரை பல வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறோம். நான் மென்மையான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறேன், ஆனால் என்னை எதிர்மறையாக பார்க்க விரும்புகிறேன். ஏதோ படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் செய்தது போல என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: