/tamil-ie/media/media_files/uploads/2023/06/roja.jpg)
நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளர்.
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தில் பிரஷாந்த்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரோஜா தொடர்ந்து ரஜினிகாந்த் விஜயகாந்த் சரத்குமார், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ரோஜா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், சினிமாவில் வெற்றி பெற்ற ரோஜா தற்போது அரசியலிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
தற்போது ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்ட ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில், ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் துணை முதல்வராக இருந்த ரோஜா தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இதனிடையே நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.