Advertisment

என் பொண்ணுங்க லவ் மேரேஜ்-க்கு சம்மதிக்க மாட்டேன்: தேவயானி கணவர் ராஜகுமாரன் அதிரடி

நாங்கள் காதல் திருமணம் செய்துகாண்டாலும் என் பிள்ளைகளின் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள் மாட்டேன் என்று தேவயானி கணவர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Devayani and Rajakumaran
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டு நட்சத்திர தம்பதியாக வலம் வரும் நடிகை தேவயானி – இயக்குனர் ராஜகுமாரன் தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் கூறியுள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவயானி. மும்பையில் பிறந்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு பிரஷாந்த் – அஜித் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தேவயானி, அகத்தியன் இயக்கத்தில் வெளியான காதல்கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழக அரசின் சிறந்த படத்திறகான விருதை வென்றிருந்தது. அடுத்து முரளியுடன் பூமணி, ராமராஜனுடன், விவசாயி மகன், சரத்குமாருடன் சூரியவம்சம், மம்முட்டியுடன் மறுமலர்ச்சி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக விஜயுடன் நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ், அஜித்துடன் நீ வருவாய் என, விஜயகாந்துடன் வல்லரசு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான காதலுடன் என்ற படத்தில் நாயகியாக நடித்த தேவயானி, அதன்பிறகு படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். 1999-ம் ஆண்டு தான் இயக்கிய நீ வருவாய் என என்ற படத்தில் தேவயானியை நாயகியாக நடிக்க வைத்தார் இயக்குனர் ராஜகுமாரன்.

தான் இயக்கிய 4 படங்களிலும் தேவயைானியை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனர் ராஜகுமாரன், அவரை காதலித்து கடந்த 2001-ம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், தேவயானி தற்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டியில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் தனது பிள்ளைகளின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நீங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டீர்கள். உங்கள் மகள்கள் காதலித்தால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜகுமாரன், கல்யாணம் பண்ணா ஓகே தான் காதல் திருமணம் செய்தால் அதில் நிறைய பிரச்சனை இருக்கிறது, இதற்கு நான் அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தான் ஆக வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால், நோ மேரேஜ் என்று கூட சொல்லியிருப்பேன் என்று ராஜகுமாரன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment