1980-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் அம்பிகா, ராதா: சகோதரிகளான இவர்கள் ஒன்றாக இணைந்தும் தனித்தனியாகவும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் வாழ்க்கை படத்தில் அம்பிகாவும், முதல் மரியாதை படத்தில் ராதாவும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியது.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறித்து திருமண வாழ்க்கயைில் இணைந்த ராதா அம்பிகா இருவருமே நடிப்பில் இருந்து விலகினர். தற்போது அம்பிகா சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தாலும் ராதா திரைத்துரையில் இருந்து விலகியுள்ளார். அதே சமயம் அவரது மகளாக கார்த்திகா நாயர், கடந்த 2011-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2009-ம் ஆண்டு தெலுங்கில் ஜோஷி என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கோ படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி, எஸ்.பி.ஜனனாதன் இயக்கத்தில் புறம்போக்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருந்த கார்த்திகாவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், பட வாய்ப்பும் குறைந்ததால் நடிப்பில் இருந்து விலகினார்.
இதனிடையே சமீபத்தில் கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது வருங்கால கணவருடன் ரொமான்டிக்காக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“