திருஷ்டி கழித்தது போல... நடப்பதெல்லாம் நன்மைக்கே; மூக்குத்தி அம்மன் 2 சர்ச்சைக்கு குஷ்பு வைத்த முற்றுப்புள்ளி!

முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அதே கேரக்டரில் இந்த படத்திலும் நடிக்கும் நிலையில், சுந்தர்.சி. முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அதே கேரக்டரில் இந்த படத்திலும் நடிக்கும் நிலையில், சுந்தர்.சி. முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kushboo Nayanth

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மூலம் முதல் முறையாக சுந்தர்.சி. நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி. நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து தற்போது நடிகை குஷ்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisment

நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடித்த இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜியுடன், ஊர்வசி, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக படத்தின் 2-ம் பாகம் தயாராகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக இயக்குனர் சுந்தர்.சி. இந்த படத்தை இயக்க கமிட் ஆனார். முதல் பாகத்தை தயாரித்த ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அதேபோல் முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அதே கேரக்டரில் இந்த படத்திலும் நடிக்கும் நிலையில், சுந்தர்.சி. முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் கன்னட நடிகர் துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். யோகி பாபு, ரெஜினா, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையைமக்கும் நிலையில், நயன்தாரா தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

Advertisment
Advertisements

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில், சுந்தர்.சி.க்கும் நாயகி நயன்தாராவுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகையும், சுந்தர்.சி மனைவியுமான குஷ்பு, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பரவும் அனைத்து தகவல்களும் வதந்தியே. படத்திற்கு திருஷ்டி எடுத்த மாதிரி அனைத்தும் அமைந்துவிட்டது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையாக நடிகை என்பதை நிரூபித்தவர். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Nayanthanra Sundar C Khushbu Sundar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: