10 மணி நேரம் மேக்கப்: படப்பிடிப்புக்கு பின் 5 மருத்துவர்களுடன் சந்திப்பு; தங்கலான் பற்றி மாளவிகா மோகன் ஓபன் டாக்

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் 5 மருத்துவர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என நடிகை மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் 5 மருத்துவர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என நடிகை மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Malavika Moh

மாளவிகா மோகன்

தங்கலான் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகன், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு, தான் 5 மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றதாக கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், பசுபதி மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி தங்கலான் படம் வெளியாக உள்ளது. 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாளவிகா மோகன், இந்த படம் குறித்து படப்பிடிப்பு முடிந்து 5 மருத்துவர்களை சந்தித்தாக கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், கோலார் பகுதியில் படப்பிடிப்பு முடிந்தவுடன், தோல் மருத்துவர், கண் மருத்துவர் உள்ளிட்ட 5 மருத்துவர்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த படத்திற்காக தினமும் 4 முதல் 5 மணிநேரம் மேக்கப் போட வேண்டி இருந்தது. அதன்பிறகு 10 மணி நேரம் மேக்கப்புடன் இருந்தேன். அதிக மேக்கப்புடன் இருந்ததால், தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு பகுதியில் அதிக வெயில் இருந்தது. குடை பிடிக்க நேரம் இல்லை என்பதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 

Advertisment
Advertisements

ஷூட்டிங் முடிந்து ரூமுக்கு வரும்போது, உடலில் பல இடங்களில் காயங்கள் அடையாளங்கள் இருந்தது. படத்தில் எருமையுடன் நடித்த ஒரு காட்சியில், நான் எருமையை பார்த்தபோது, எருமை உங்களுக்கு பிடிக்குமா என்று பா.ரஞ்சித் என்னிடம் கேட்டார். அடுத்த நிமிடம் அதில் ஏறி உட்காருமாறு கூறினார். நான் எருமை மாட்டின் மீது அமர்ந்தது இல்லை என்றாலும், அவர் சொன்னதை கேட்டு, அதன் மீது அமர்ந்தேன். இந்த காட்சி குறித்து அவர் முன்கூட்டியே என்னிடம் சொல்லாததால் எனக்கு அதிர்ச்சியாக இருந்துது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Malavika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: