New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Priyanka-Nalkari.jpg)
நடிகை பிரியங்கா நல்காரி
தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
நடிகை பிரியங்கா நல்காரி
சன் டி.வி.யின் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.
தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியல்ல நடித்து வந்தார்.
இதனிடையே சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை திடீர் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியலில் இருந்து விலகியுள்ளார். சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் பச்சை நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.