ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், என்ன நடந்துது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த பிரியங்காவுக்கு ரோஜா சீரியல் பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்றே சொல்லாம். அவரின் உண்மையாக பெயர் மறைந்து அனைவரும் ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பிரியங்கா பிரபலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பிரியங்கா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த சீரியல் மற்ற சீரியல்களின் சாயலில் இருப்பதாக கூறி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் நடித்து வரும்போது தனது நீண்டநாள் காதலரை கடந்த மார்ச் 23-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இதனிடையே பிரியங்கா தற்போது நடித்து வரும் சீதாராமன் சீரியலில் இருந்து தற்போது அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமியார் மருமகள் மோதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில், இருந்து பிரியங்கா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவில் இந்த விலகர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.