Advertisment

எங்களை பற்றி என்ன தெரியும்? எங்கள் சாதனை உங்களால் செய்ய முடியுமா? விமர்சனங்கள் பற்றி ராதிகா காட்டம்!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ராதிகா தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Radhika Sarathkumar Il

ராதிகா சரத்குமார்

நிகழ்ச்சி ஒன்றில் விருது வாங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் அவதூறு கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா சரத்குமார், அடுத்து ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ராதிகா தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ளார்.

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்த ராதிகா முன்னணி நடிகையாக உயர்ந்த நிலையில், தற்போது வெள்ளித்திரையில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேபோல் தனது கணவருடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வரும் ராதிகா, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருந்தார்.

திரைப்படங்களில் நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பிஸியாக இருந்து வரும் ராதிகா மற்றும் அவரது குடும்பம் குறித்து அவ்வப்போது வலைளதங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எபபோதுமே கண்டுகொள்ளாமல் இருந்த ராதிகா சரத்குமார், விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சியில், விருது வாங்கியபோது தனது ஆதங்கம் மற்றும் கோபத்தை வெளிக்காட்டும் வகையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.

இதில், நாங்கள் பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் நடித்த படங்கள் மற்றும் அந்த படங்களில் எங்கள் கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி பேசுங்கள். காரணம் நீங்கள் பணம் கொடுத்து அந்த படங்களை பார்க்கிறீர்கள். அதற்காக நீங்கள் பேசலாம். ஆனால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?

பிரபலங்கள் என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் நாங்கள் பொறுத்தக்கொண்டு இருக்க வேண்டுமா? இணையத்தின் பயன்பாடு எல்லோருக்கும் இருக்கிறது என்பதால் முகத்தை வெளியில் காட்டாமல், என்ன வேண்டுமானாலும் பேசலாம். எவ்வளவு கீழ்த்தனமாகவும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் பேச்சினால் நாங்கள் உடைந்து போவோம் என்று நினைக்காதீர்கள். நாங்கள் பிரபலங்கள் தான் ஆனால் எங்களுக்கும் மனசு இருக்கு.

முகத்தை காட்டாமல் கண்டமேனிக்கு பேசுபவர்களை நாங்கள் எங்கள் மனதில் ஏற்றுக்கொள்வது கிடையாது. எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. இவ்வளவு பேசுகிறவர்கள் எங்கள் ஒரு நிமிட வேலையை செய்ய முடியுமா? எங்கள் வேலை என்ன என்று எங்களை பற்றி நெகடீவ்வாக பேசுபவர்களுக்கு தெரியுமா? சும்மா உட்கார்ந்துகொண்டு அடுத்தவர்கள் கதையை பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் நாங்கள் எவ்வளவோ சாதனைகள் செய்துகொண்டு இருக்கிறோம்.

அடுத்தவர்களை நம் இஷடத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அவரவர் வேலையை பார்ப்பது அவரவருக்கு நல்லது என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். இவரது பேச்சு தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment