90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரம்பா தனது மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
1992-ம் ஆண்டு ஆ ஒக்கடே ஆகட்டு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரம்பா. தொடர்ந்து, உழவன் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர். கார்த்தியின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரம்பா, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பேஜ்பூரி, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ரம்பா தற்போது வெளிநாட்டில செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு லான்யா, சாஷா, ஷிவின் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சமூகவலைதளயங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது மூத்த மகள் லான்யாவின் புகைப்படத்தை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே ரம்பா போலவே இருக்கிறார் என்றும், ரம்பாவின் பள்ளிப்பருவ புகைப்படங்கள் என்று நினைத்தேன் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் லான்யா பரிசு வாங்குவது போன்று வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.