/indian-express-tamil/media/media_files/odDfMAlunSp5JjhoYIHU.jpg)
புதிய சீரியலில் ரம்யா கிருஷ்ணன்
சினிமா சின்னத்திரை என பிஸியாக வலம் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன கடந்த சில வருடங்களாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். அந்த படத்தில்,ரஜினியை பார்த்து வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவில்லை என்று ரம்யா கிருஷ்ணன் சொல்லும் டைலாக் இப்போதும் பிரபலமாக உள்ளது.
90-களின் இறுதியில் வெளியான படையப்பா ரஜினி மட்டுமல்லாமல் ரம்பா கிருஷ்ணனுக்கும் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டரில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
2008-ம் ஆண்டு கலசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன், தொடர்ந்து தங்கம், ராஜகுமாரி, வம்சம்,உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு தமிழில் சின்னத்திரையில் நடிக்காத ரம்யா கிருஷ்ணன் தற்போது மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ரீ-என்டரி கொடுத்துள்ளார். ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நள தமயந்தி என்ற தொடரில் ரம்யா கிஷ்ணன் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன், கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சின்னத்திரையில் இவர் நடிக்க வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க உள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.