Advertisment

விஜயகாந்த் திருமணத்தின் போது நடந்த அந்த சம்பவம்: நடிகை ரேகா உருக்கம்

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகை ரேகா, அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Rekha

நடிகை ரேகா - விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், நேரில் வர முடியாதவர்கள் தங்களது சமூகவலைதளங்களில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், விஜயகாந்துடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகை ரேகா தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், விஜயகாந்த் உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வீடியோவில், கேப்டன் விஜயகாந்த் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் 4 படங்களில் இணைந்து நடித்துள்ளேன். பொதுவாக யார் இறந்தாலும் நான் சென்றுவிடுவேன். ஆனால் இப்போது கேரளாவில் ஒரு ஷூட்டில் மாட்டிக்கிட்டேன். அதனால் என்னால் வர முடியவில்லை.

நடிகர் யோகி பாபு கூட இங்கு தான் இருக்கிறார். கேப்டன் இறந்த செய்தி கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவரது திருமணத்தின்போது நான் போய் ஒரு கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். அப்போது திடீரென ஒரு கார் வந்தது. உள்ளே ஏறுங்க ஏறுங்க என்று சொன்னார்கள். நான் காரில் ஏறி பார்த்தால் உள்ளே மாப்பிள்ளையும் பொண்ணும் (விஜயகாந்த் அவரது மனைவி) உட்கார்ந்திருக்கிறார்கள். நான் அப்போது, அந்த மேடம் மடியில் தான் அமர்ந்திருந்தேன். எனது கார் பக்கத்தில நிறுத்தி என்னை இறக்கி விட்டுவிட்டு அதன்பிறகு சென்றார். 

அவரது கல்யாணத்திற்கு போன என்னால், அவரது இறப்பிற்கு செல்ல முடியவில்லை. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மகன்கள் அழுவதை பார்க்கும்போது நமக்கு கண்ணீர் வருகிறது. ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவருடன் இணைந்து பணியாற்றும்போது, அனைவருக்கும் சாப்பாடு கொடுப்பவர். அரசியலில் நல்ல முன்னேற்றம் கண்ட அவர் உடல்நிலையை பார்த்துக்கொள்ளவில்லை என்பது தான் வருத்தம்.

அவர் இறந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அவர் ஆதமா சாந்தியடைய வேண்டும். அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய வலிமையை கடவுள் கொடுக்க வேண்டும். அவர் ஆத்மா சாத்தியடைவதற்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment