அவருக்கு கல்யாணம் ஆகலன்னா அது நடந்திருக்கும்... ரவீனா ரவி ஓபன் டாக்

பகத் பாசிலுடன் முதல் காட்சியில் நடிக்கும்போது அவர் என்னிடம் மேக்கப் போடுவீங்களா என்று கேட்டார். இல்லை சார் என்று சொன்ன போது எனக்கு பிடிக்காது என்று சொன்னார்.

பகத் பாசிலுடன் முதல் காட்சியில் நடிக்கும்போது அவர் என்னிடம் மேக்கப் போடுவீங்களா என்று கேட்டார். இல்லை சார் என்று சொன்ன போது எனக்கு பிடிக்காது என்று சொன்னார்.

author-image
WebDesk
New Update
Fahad Fazil

பகத் பாசில் - ரவீனா ரவி

மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவி கேரக்டரில் நடித்த டப்பிங் கலைஞர் ரவீனா ரவி, இந்த படத்தில் அவருடன் நடித்த அனுபவம் குறித்தும், அவருக்கு திருமணமாகாமல் இருந்திருந்தால் அது நடந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் வெளியான படம் மாமன்னன். உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தவர் ரவீனா ரவி. டப்பிங் கலைஞரான இவருக்கு இந்த படத்தில் வசனங்கள் இல்லை என்றாலும் அவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ரவீனா ரவி அளித்த பேட்டி ஒன்றில் மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். பகத் பாசிலுடன் முதல் காட்சியில் நடிக்கும்போது அவர் என்னிடம் மேக்கப் போடுவீங்களா என்று கேட்டார். இல்லை சார் என்று சொன்ன போது எனக்கு பிடிக்காது என்று சொன்னார். அதன்பிறகு லிப்ஸ்டிக் போடுவீங்களா என்று கேட்டார்.

நானும் இல்லை என்று சொல்லிவிட்டு நேச்சுரலாவே என் உதடு அப்படித்தான் இருக்கும் என்று சொன்னேன். அதன்பிறகு ஒரு காட்சியில் அவர் என்னை கட்டி பிடிப்பது போல் சீன் வந்தது அப்போது எதிர்பாராத விதமாக அவரது சட்டையில் என் லிப்ஸ்டிக் பதிந்துவிட்டது. இதை கவனித்த நான் அவரிடம் சொன்னபோது உடனடியாக சட்டையை மாற்றிக்கொண்டார்.

Advertisment
Advertisements
Fahad Fazil1
மாமன்னன் படத்தில் பகத் பாசில் - ரவீனா ரவி

இது குறித்து மாரி செல்வராஜ் மேடையில் சொன்னபோது அனைவரும் நான் அவருக்கு வேண்டுமென்றே முத்தம் கொடுத்ததாக நினைத்துவிட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது எதிர்பராமல் நடந்த ஒன்று. ஒருவேளை அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

அதேபோல் மேக்கப் லிப்ஸ்டிக் போட மாட்டேன் என்று சொல்லிவிட்டு அவரது சட்டையில் லிப்ஸ்டிக் பட்டதும் அப்போது அன்னனைக்கு நான் கேட்டப்போ பொய் சொன்னியா என்று கேட்டார். இதை கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்றுதான் தெரிந்தது பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று என தெரிவித்துள்ளார் ரவீனா ரவி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fahad Fazil Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: