Advertisment

யோகாவில் தீவிரமான சமந்தா... மயோசிடிஸ் நோய்க்கு எதிராக கடும் போராட்டம்

தனது ரசிகர்களுக்கும் சமூகவலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களுக்கும் சமந்தா ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha

யோகாவுக்கு மாறிய நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா மயோசிடிஸ் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் நடிப்பில் இருந்து சில மாதங்கள் ஓய்வு எடுத்து வரும் நிலையில், தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த நடிகை சமந்தா கடைசியாக தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் தயாரான யசோதா மற்றும் சகுந்தலம் படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் குஷி மற்றும் சென்னை ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் சமந்தா நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். இதற்காக பாலிக்கு சென்றுள்ள சமந்தா அங்கிருந்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதேபோல் சமீபத்தில் அவர் ளெியிட்ட தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது ரிசார்ட்டின் ஜிம்மில் யோகா பயிற்சி செய்வதைக் பதிவிட்டுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் சமூகவலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் சமந்தா, விடுமுறையில் இருக்கும்போது உடற்பயிற்சியில் சமரசம் செய்யத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சமந்தா தற்போது வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டா ஸ்டோரியில், வான்வழி யோகா திருப்பத்துடன் கீழ்நோக்கி யோகா செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தனது தோழியான அனுஷா ஸ்வாமியை டேக் செய்து, வெள்ளை இதய ஈமோஜியுடன் "நாள் 2" என்று பதிவிட்டுள்ளார்.

publive-image

ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜிக்கயாசா குப்தாவின் அறிவுரைப்படி, கீழ்நோக்கிய இந்த போஸ் பல நன்மைகளைக் கொடுக்கும். உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடல் முழுவதும் தசைகளை வலுப்படுத்துகிறது, குறிப்பாக தோள்கள், கால்கள், கணுக்கால் மற்றும் முக்கிய தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது செறிவு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது உடலை உற்சாகப்படுத்துகிறது மற்றும் அமைதிப்படுத்துகிறது.

இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று குப்தா குறிப்பிட்டார். மேலும், கார்பல் டன்னல் நோய்க்குறி, பிரிக்கப்பட்ட கண் விழித்திரை அல்லது பலவீனமான கண் நுண்குழாய்கள், இடம்பெயர்ந்த தோள்பட்டை அல்லது தோள்பட்டை காயம் அல்லது வயிற்றுப்போக்கு உள்ள நபர்கள் ஒரு நிபுணரின் முறையான வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இந்த ஆசனத்தை மேற்கொள்ள வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment