நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சீதா ஒரு கட்டத்தில் அவரை பிரிந்த நிலையில், பிரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து சீதா ஒரு பழைய பேட்டியில் கூறிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகை சீதா, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவரை தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் பார்த்திபன். பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகமானார்.
முதலில் புதிய பாதை படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாத சீதா தனது அப்பாவின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் இருவருக்குமே பெரிய வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய படமாக அமைந்த்து. 1990-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 11 வருட இடைவெளியில் கடந்த 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின் சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். தற்போது, அவர் டீன்ஸ் என் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வரும் பார்த்திபன் சீதா குறித்தும் பேசி வருகிறார். இதனிடையே சீதா பார்த்திபனுடனான தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து சில மாதங்களுக்கு முன்பு வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதில், நான் புதிய பாதை படத்தில் நடிக்கும் போது பார்த்திபனை காதலிக்க தொடங்கினேன். எங்கள் இருவர் மனதிலும் காதல் இருந்தது. ஆனால் நான் முதலில் அவரிடம் காதலை சொல்லவில்லை. அவர்தான் எனக்கு தினமும் போன் பண்ணி அந்த மூன்று வார்த்தையை சொல்லுங்க என்று சொல்லுவார். நான் அதை இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு, ஒருநாள் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன். அந்த நேரத்தில் என்னுடைய அப்பா போனில் கேட்டு விட்டார். நான் என்னுடைய காதலை பார்த்திபனிடம் சொல்லிய முதல் நாளே பிரச்சனை தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில், எங்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் பார்த்திபனிடம் அதிகமாக எதிர்பார்த்தேன். அதனால் தான் எங்களுக்கு பிரிந்து வந்தது என்று அவர் சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். நான் சாதாரணமாக ஒரு பெண் என்ன ஆசைப்படுவாரோ அதுபோல ஆசைப்படேன். என்னுடைய கணவர் எனக்கு மட்டும் இருக்க வேண்டும். என்னுடைய கனவுகளுக்கு துணையாக இருக்க வேண்டும் நான் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு அவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
அதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன் பொதுவாக நான் மட்டுமல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் செய்து கொண்டால் சுயமாக நம்முடைய சம்பாத்தியம் இருக்க வேண்டும். எல்லா கணவன்மார்களும் தனக்காக வீட்டிலேயே காத்திருக்கும் மனைவிகளை விரும்புவதை விடவும் தன்னை போலவே வெளியே போயிட்டு வீட்டிற்கு வரும் மனைவியை தான் அதிகமானோர் விரும்புகிறார்கள் என்று சீதா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“