Advertisment

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் நடிகை ஷகீலா... ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

சமீபத்தில் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

author-image
WebDesk
Sep 13, 2023 17:36 IST
Shakila

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷகீலா

சமீபத்தில் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை ஷகீலா புகைப்பிடிப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisment

தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த வருகிறது. இதில் ஏற்கனவே தமிழில் 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் தமிழில் விரைவில் தொடங்க உள்ளது. வழக்கம்போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்த்து.

இதனிடையே யாரும் எதிர்பாக்காத வகையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் தமிழில் ஜெமினி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நடிகை கிரணும் போட்டிளராக பங்கேற்றுள்ளார். இதில் நடிகை கிரண் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், ஷகீலா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலாவும் – கிரணும் நெருக்கம் கட்டி வந்த நிலையில், கிரண் திடீரென வெளியேறிவிட்டதால், டென்ஷனாக இருந்த நடிகை ஷகிலா உடனடியாக சிகரெட் வைத்து புகை பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனலில் பலரை பேட்டி எடுக்கும் ஷகீலா அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வருகிறார்.

ஆனால் தற்போது பலரும் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷகீலா இப்படி புகைப்பிடித்துக் கொண்டிருப்பது மட்டும் நியாயமா? என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளியில் இப்படி சர்ச்சையாக கேள்விகள் விமர்சனங்கள் வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் ஷகீலா சகபோட்டியாளர்களுடன் நட்புடன் பழகி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் காமெடியாகவும் எளிமையாகவும் நடந்து கொள்ளும் ஷகீலாவை பலரும் அம்மா என்று அழைத்து வரும் நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன்பிறகு தேறி வந்த அவர், தற்போது கிரண் வெளியேறிவிட்டார் என்பதற்காக புகை பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment