இந்தி பிக்பாஸில் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகை ஷ்ருதிகா

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் தமிழ் நடிகை ஷ்ருதிகாவின் செயலால் சக போட்டியாளர் அழுத சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் தமிழ் நடிகை ஷ்ருதிகாவின் செயலால் சக போட்டியாளர் அழுத சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Hindi shruthika

இந்தி பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகை ஷ்ருதிகாவின் செயலால், சக போட்டியாளர் அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

இந்தி பிக்பாஸின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், தமிழ் நடிகை ஷ்ருதிகா கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், தங்களது பெயரைக் குறிப்பிடாமல் சக போட்டியாளர்கள் குறித்து எழுத வேண்டுமெனவும், அக்கருத்தை எழுதிய போட்டியாளர் யார் என அவர்கள் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் டாஸ்க் வழங்கப்பட்டது. 

அதன்படி, மூத்த நடிகையான ஷில்பா ஷிரோத்கர் குறித்து ஷ்ருதிகா எழுதிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஷ்ருதிகா தான் அந்தக் கருத்துகளை எழுதினார் என ஷில்பா கண்டறிந்து கொண்டார். குறிப்பாக, தனது நடத்தை குறித்தும், தனது மகள் குறித்தும் ஷ்ருதிகா எழுதியிருந்ததாக ஷில்பா குற்றஞ்சாட்டினார்.

இதற்காக ஷ்ருதிகா விளக்கமளித்தும் அதனை ஏற்க ஷில்பா மறுத்துவிட்டார். மேலும், மற்ற போட்டியாளர்களுடன் பேசும் போது கண்ணீர் சிந்தி அழுத ஷில்பா, கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் குறித்து எதுவும் கூற முடியவில்லை எனத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இச்சம்பவம் குறித்து இந்தி பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Hindi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: