Advertisment

சரத்பாபு மரணத்திற்கு இதுதான் காரணமா? சுஹாசினி மணிரத்னம் அதிர்ச்சி தகவல்

நடிகர் சரத்பாபு மறைவுக்கு மோடி அமித்ஷா மற்றும் திரைபுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarath Babu

சுஹாசினி மணிரத்னம் - சரத்பாபு

நடிகரு சரத்பாபு உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில்,மல்பிள் மைலோமா பாதிப்பினால் தான் அவர் உயிரிழந்துவிட்டதாக நடிகையும் இயக்குனரமான சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இருந்த சரத்பாபு 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராமராஜ்யம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர். அதன்பிறகு பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் வசந்த முல்லை, தெலுங்கில் மல்லி பெள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்த சரத்பாபு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மோடி அமித்ஷா மற்றும் திரைபுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சரத்பாபுவின் மறைவுக்கு மல்டிபிள் மைலோமா (Multiple Myeloma) என்னும் நோய் பாதிப்புதான் காரணம் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக சுமார் 92 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். சாதாரண காய்ச்சல் என்று தான் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய் தீவிரம் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மல்டிபிள் மைலோமா நோய் காரணமாகத் தான் உயிரிழந்தார். மைலோமா என்பது ஒரு வகை இரத்த புற்றுநோய் இது எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இப்படியொரு பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து தானும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் மருத்துவர்கள் இதனை தெரிவித்ததாக சுஹாசினி கூறியுள்ளார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment