/indian-express-tamil/media/media_files/uVNzNgDuh7Fvf5F9gjEq.jpg)
நடிகை சுகன்யா - தலைவாசல் விஜய்
90-களில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர், மீண்டும் சின்னத்திரையில், என்டரி ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்கும் சீரியல் எந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1991-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
1997-ல் வெளியான தம்பிதுரை படமே இவர் ஹீரோயினாக நடித்த கடைசி படமாகும். அதன்பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சுகான்யா, கடைசியாக சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் நடித்திருந்தார். பட வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரையில் என்டரி ஆன சுகான்யா, 2003-ம் ஆண்டு ஆனந்தம் என்ற சீரியிலல் நடித்து புகழ் பெற்றார்.
6 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் மற்றும் மலையாளத்தில் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகன்யா 2019-ம் ஆண்டுக்கு பின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகன்யா மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சுகன்யா எந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி சேனல்களாக இருக்கும், சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களை விட்டு விட்டு பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் சுகன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுளளது.
இந்த சீரியலில் அவருடன் இணைந்து நடிகர் தலைவாசல் விஜய் நடிக்க உள்ள நிலையில், சக்தி ஐபிஎஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லன் அர்ஜூனின் அக்கா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுவாதிகா செந்தில் குமார் இந்த சீரியலில் மெயின் ரோலில் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார். முன்னணி சேனல்களுக்க இணையாக சீரியல்களை ஒளிபரப்ப தயாராகி வரும் பொதிகை சேனலில் சுகன்யா நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.