Vanitha Vijayakumar Vs Lakshmi Ramakrishnan Tamil News : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வினிதா விஜயகுமார். 90 களில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களால் தான் பிரபலமான பேசப்பட்டு வருகிறார். மேலும் இவரது பெயர் இணையத்தில் வைரலாகி வருவதற்கு மற்றொரு காரணம் இவரது திருமண சர்ச்சை என்று கூறலாம். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா கடந்த சில மாதங்களுக்கு பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் இவரது திருணமத்தின்போது செய்த அட்ராசிட்டிகள் இணையத்தில் பெரும் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், திருமணம் முடிந்து 3-வது நாளே பீட்டர் பாலை விவகரத்து செய்வதாக அறிவித்து அனைவரையும் திகைக்கவைத்தார் வனிதா. இந்த விவகராத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவித்த நிலையில், பதிலுக்கு வனிதாவும் அவர்களுக்கு பதிலடிகொடுத்து வந்தார். அந்த சமையத்தில் புதிதாக கருத்து சொன்னவர்தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் கருத்து வனிதாவை கோபப்படுத்தியதை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா.
இதனால் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வனிதா தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று லட்சுமி ராமகிருஷ்ணனும் போலீசில் புகார் அளித்த நிலையில், தன்தைப்பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் அவதூறாக பேசிவிட்டார் என்று வனிதாவும் பதில் புகார் அளித்திருந்தார்.
இந்த பிரச்சினை தொடர்ந்துகொண்டே வந்த நிலையில், தான் இனிமேல் வனிதா குறித்து எந்த கருத்தும் கூறப்போவதில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் வனிதாவினால் தான் மன வேதனை அடைந்ததாக கூறி இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவை நடிகை என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த மோசமான நிகழ்வால் நான் மிகவும் உடைந்து போனேன். இனி நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன. இனி இயக்குனர் பணியை மட்டுமே செய்யலாம் இனி இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனால் இந்த பிரச்சினை தற்காலிகமாக முவுக்கு வந்த நிலையில், தற்போது இந்த பிரச்னை ரசிகர்கள் மூலம் மீண்டும் கிளம்பியுள்ளது. வனிதா மீது ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தன்னிடம் பலர் கேட்டு வருவதாக கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
எஃப் ஐ ஆர், சட்டரீதியான நோட்டீஸ் கிரிமினல் குற்றச்சாட்டுகள் எல்லாம் அவருக்கு ஒன்றும் புதிதான விஷயமில்லை அவர் சட்டத்தை மதிப்பது கிடையாது. அதனால் இதற்கெல்லாம் சட்டத்தின் நேரத்தை செலவு செய்யக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன். பட்ட வரைக்கும் போதும் ஏற்கனவே சாக்கடையில் கல் எறிந்து விட்டேன் இனி அதிலிருந்து நகர்ந்து செல்வது தான் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil