தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர் சரத்குமார் – ராதிகா ஜோடி. பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதற்கு முன்பே சாயா என்பரை திருமணம் செய்துகொண்ட சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமாரை கொஞ்சி மகிழும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின்னாளில் ஹீரோவாகி முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் சரத்குமார். பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சரத்குமார், தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை அசோக் செல்வனுடன் இவர் நடித்த போர் தொழில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
அதேபோல் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தெலுங்கில் சிறந்த வில்லி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், பல வெற்றிப்படங்களில் முக்கிய வில்லி கேரக்டரில் நடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வரலட்சுமி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், குடும்பத்துடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வரலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை ராதிகாவின் கன்னங்களை பிடித்து செல்லமாக கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவருக்கு பின்னால் நடிகர் சரத்குமார் நின்றுக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் பொங்கல் தினத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்படும் நிலையில், ராதிகா – வரலட்சுமி இருவரும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்ற வதந்திக்கு இந்த புகைப்படத்தின் மூலம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.