Advertisment

HBD Fahad Fazil : பகத் பாசிலை ஒரு முழுமையான நடிகனாக மாற்றும் மூன்று முக்கிய காட்சிகள்

இன்று பிறந்த நாள் காணும் மாமன்னன் பகத் பாசில் நடித்த தனித்துவமான படங்களில் இருந்து மூன்று குறிப்பிடத்தக்க காட்சிகளை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fahad Fazil

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஃபஹத் பாசில் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

மலையாள சினிமா வரலாற்றில் பாப்பாயுதே ஸ்வந்தம் அப்பூஸ் (1992), மணிச்சித்திரதாழு (1993), மற்றும் அனியாதிபிரவு (1997) உள்ளிட்ட திரைப்பங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் பாசில். மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இவர், கடந்த 2002-ம் ஆண்டு புதிய படம் ஒன்றை இயக்கினார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் புதுமுக நடிகர் நடிக்கிறார் அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியது.

Advertisment

1997-ல் வெளியான அணியாதிபிரவு (தமிழில் காதலுக்கு மரியாதை) திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்தது போல், இந்த படத்தின் மூலம் மற்றொரு புதிய நட்சத்திரம் மலையாள சினிமாவிற்கு கிடைக்க போகிறார் என்ற நம்பிக்கையில், சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் நம்பிக்கையை சிதைக்கும் அளவுக்கு, காய் எட்டும் தூரத்து என்ற பெயரில் வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்து.

அதோடு மட்டுமல்லாமல் படத்தில் புதுமுக நடிகராக அறிமுகமாவருக்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தது. அந்த நடிகர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாசிலின் மகனும் இப்போது நடிப்பு அசுரன் என்று போற்றப்படும் நடிகர் பகத் பாசில் தான். தனது முதல் படத்திலேயே பல விமர்சனங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்த, அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிவிட்டார். இதனால் மலையாள திரையுலகமும் இவரை மறந்துவிட்டது என்று சொல்லலாம்.

ஆனால் நெருப்பில் இருந்து வெளிவரும் ஃபீனிக்ஸ் பறவையைபோல், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் பகத் பாசில். நடிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்திய பகத் பாசில், 2002-ம் ஆண்டு தனக்கு வந்த விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதன்பிறகு காக்டெய்ல் மற்றும் டோர்னமென்ட் போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து தன்னை நிரூபித்தார்.

இறுதியாக, மாடர்ன் கிளாசிக், சாப்பா குரிசு மூலம் திரைப்படத் துறையில் மீண்டும் ஒரு முன்னணி நடிகராக தனது இடத்தை பெற்றார். இதில் சாப்பா குரிசு படத்திற்காக சிறந்த சப்போர்ட்டிங் நடிகருக்கான கேரளா அரசின் விருதை வென்றிருந்தார். கடும் விமர்சனங்களால் நடிப்பை விட்டு விலகிய பகத் பாசில், மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இளம் நடிகர்களுடன் போட்டியிடத் தகுதியானவர் என்பதை நிரூபித்தார். இதன் மூலம் சமகால இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

பகத் ரீ-என்டரி கொடுத்த இந்த 14 ஆண்டுகளில், ஒரு சாதாரண நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி இப்போது இணையற்ற இணையற்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகரான மாறியுள்ளார். இவரது நடிப்பில், 22 பீமெயில் கோட்டயம், அன்னையும் ரசூலும், நார்த் 24 காதம் முதல், மகேஷின்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும், கும்பலங்கி நைட்ஸ், ஜோஜி, மாலிக், மற்றும் சமீபத்தில் வெளியான மாமன்னன் வரை தனது ஈடு இணையற்ற நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் அவர் தனது திறமையின் உச்சத்தை அடைந்துவிட்டார் என்று நம்பும் போது, பகத் தனது நடிப்பு திறமையை  மேலும் உயர்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இன்று ஃபஹத் பாசில் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்த மூன்று வித்தியாசமான படங்களின் மூன்று குறிப்பிடத்தக்க காட்சிகளை பார்க்கலாம். இந்த காட்சிகளில் அவரது நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டுகிறது

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் படத்தில் செயின் பறிக்கும் காட்சி

சமீப காலங்களில் வெளிவந்த மிகச்சிறந்த மலையாளத் திரைப்படங்களில் ஒன்று தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும், திரைக்கதை எழுதுவதிலும், எழுதப்பட்ட விஷயங்களையும் வைத்து தலைசிறந்த படைப்பாக மாற்றுவதிலும் இந்த படம் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து, தேவையற்ற காட்சிகளை சாமர்த்தியமாக தவிர்த்து படம் சிறந்து விளங்குகிறது. அதே நேரத்தில் திரையில் உள்ள அனைத்து கேரக்டர்களும் சரியான முக்கியத்துவத்துடன் வைத்திருப்பதை பார்க்கலாம்.

பிரசாத் (சுராஜ் வெஞ்சாரமூடு) மற்றும் ஸ்ரீஜா (நிமிஷா சஜயன்) ஆகிய முன்னணி கேரக்டர்களாக நடித்த இந்த படத்தில் அவர்களின் அறிமுக காட்சிகளுக்கு பிறகு படம் கதையை நோக்கி நகர்கிறது. இந்த படத்தில் சுமார் 18 நிமிடங்கள், இருவரும் காசர்கோட்டின் தூசி நிறைந்த மற்றும் தரிசு நில பகுதிகள் வழியாக பேருந்து பயணத்தில் செல்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு மனிதன் (பஹத்) ஸ்ரீஜாவின் நகையைத் திருடி புத்திசாலித்தனமாக விழுங்குகிறான். மற்ற பயணிகள் அனைவரும் ஸ்ரீஜாவின் பேச்சை நம்பி, குற்றவாளியை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.

இது நவீன மலையாள சினிமாவில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றாக தனித்து நிற்கிறது, வசனங்கள் இல்லாமல் முழு முகத்தையும் கூட வெளிப்படுத்தாமல் ஃபஹத்தின் குறிப்பிடத்தக்க நடிப்புத் திறமையைக் இந்த காட்சி காட்டுகிறது. பஸ் நகரும் நிலப்பரப்பைக் காட்டும் ஒரு வைட் ஷாட்டைத் தொடர்ந்து, உடனடியாக ஸ்ரீஜாவின் நெருக்கமான காட்சியை காட்டுகிறது. அதன்பிறகு நாயகன் தனது இரு கைகளையும் ஸ்ரீஜாவின் பின் இருக்கைக்கு மேலே உள்ள கம்பியில் வைத்து, தூங்குவது போல் தெரிகிறது.

அதன்பிறகு தன் கைகளில் ஒன்றைக் கீழே இறக்குகிறார். அப்போது அவரது வெளிர் பழுப்பு நிற கண்களை வெளிப்படுத்தும் போது விசில் அடிக்கும் பின்னணி பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. சிறிது நேர கண் சிமிட்டலுக்குப் பிறகு, அவர் ஸ்ரீஜாவின் தங்க கழுத்துச் சங்கிலியின் மீது அவரது பார்வை வைக்கிறார். அந்தத் துல்லியமான தருணத்தில், ஒரு கட்டரைப் பிடித்துக் கொண்டு முதலில், ஸ்ரீஜா அயர்ந்து தூங்குவதை உறுதிசெய்ய மெதுவாக குத்துகிறார். இதற்கு அவர் எந்த ரியாக்டும் பண்ணாத நிலையில்,  துல்லியமாக அவளது சங்கிலியை வெட்டி, எடுத்துவிடுகிறார்.

இதற்கிடையில், அவரது செயல்களை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அவரது கண்கள் தொடர்ந்து சுற்றுப்புறங்களை ஸ்கேன் செய்து வருகின்றன. சங்கிலியை அறுத்தவுடன், அவர் உடனடியாக கட்டரை ஜன்னலுக்கு வெளியே தூக்கிப்போட்டுவிடுகிறார். சங்கிலியைத் துண்டித்த பிறகு, அவளது கழுத்தில் இருந்த சங்கிலியை மெதுவாக இழுக்கிறான், ஆனால் அதற்கு முன், ஸ்ரீஜா பயத்தில் அலறியபடி எழுகிறாள். அந்த நொடியில், என்ன செய்வது என்று தெரியாமல் சங்கிலியை வேகமாக விழுங்குகிறார். இந்த பதட்டமான தருணத்தில் அவரது வெளிப்பாடுகள் முற்றிலும் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும். அவரது வலுவான உந்துதலை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் அங்கு திரண்டு வந்து அவரை சரமாரியாக தாக்குகிள்றனர். ஆனாலும் அவர் தான் ஒரு அப்பாவி என்பது போல் நடந்துகொள்கிறார்.

இந்த நடிப்புக்காகவே கொண்டாடப்பட்ட இந்தக் காட்சி, பகத்தின் நடிப்புத் திறமையை அவரது கண்களால் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சான்றாக உள்ளது. ஒரு செயல் நடக்கும் காட்சியின் போது முக்கியமாக அவற்றை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும் என்றாலும் கூட, இயக்குனர் திலீஷ் போத்தனும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியும் காட்சியை படமாக்கிய விதம் அனைவரின் கவனத்தைம் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு செயலையும் முழுமையுடன் நிறைவேற்றும் திறமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பார் பகத் பாசில். இந்த காட்சியின் குறிப்பிடத்தக்க பகுதியில் அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், பகத்தின் கண் மற்றும் அவரது உடல் மொழியில் தேர்ச்சி ஆகியவை கவனம் ஈர்த்துள்ளது.

அவர் சங்கிலியை மெதுவாகப் பிரித்தெடுப்பதைப் பிடிக்கும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் கூட, ஃபஹத்தின் கைகள் ஒரு அனுபவமிக்க திருடனைப் போலவே நிலையானதாக இருக்கும், மேலும் அவர்களின் வேகம் இந்த உண்மையை வெளிப்படுத்துகிறது.

கும்பலங்கி நைட்ஸில் பேபி மோல் மற்றும் சிமியுடன் ஷம்மியின் வாக்குவாதம்

கும்பலங்கி நைட்ஸில் ஷம்மி சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு 'ஹீரோ', என்று சொல்ல முடியாது என்றாலும், மலையாள சினிமாவில் ஹீரோக்களுடன் பொதுவாக தொடர்புடைய பண்புகளை அவரது கேரக்டர் உள்ளடக்கியதால் படத்தின் ஹீரோ அவர் பகத் என்று சொல்லலாம். இருப்பினும், இயக்குனர் மது சி நாராயணன் மற்றும் எழுத்தாளர் சியாம் புஷ்கரன் ஆகியோர் மலையாள குடும்ப நாடக ஹீரோவின் பொதுவான குணாதிசயங்களுக்கு விசித்திரமான தன்மையைச் சேர்த்தபோதுதான், பொதுவாக இதுபோன்ற கதாபாத்திரங்களின் சிக்கல் தன்மையை ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.

படம் முழுவதும், ஃபஹத்தின் கதாபாத்திரம், ஷம்மி,  ரசிகர்களின் முதுகெலும்புகளை உண்மையிலேயே நடுங்க வைக்கும் பல தருணங்களை தரும் அளவுக்கு உள்ளது. ஆனால் வெவ்வேறு உணர்ச்சிகள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு இடையில் பகத்தின் நடிப்பு திறன் படத்தின் க்ளைமாக்ஸை நோக்கிய ஒரு அற்புதமான காட்சியில் தெளிவாகிறது. இந்த குறிப்பிட்ட தருணத்தில், ஷம்மியின் மைத்துனி, பேபி மோல் (அன்னா பென்), தனது காதலன் பாபியுடன் (ஷேன் நிகம்) ஓடிப்போவதற்கான தனது விருப்பத்தை தைரியமாக சொல்வார்.

ஒரு சோபாவில் பேபிக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஷம்மி, குடும்பத்தின் "நல்வாழ்வு" என்ற சாக்குப்போக்கின் கீழ், தங்கள் நலன்கள், முடிவுகள் மற்றும் குட்டி ஈகோக்களை வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது திணிக்கும் வழக்கமான மலையாளிகளின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு தனது பார்வையை நேரடியாக பேபியை நோக்கி நிலை நிறுத்தும் நாயகன், பகையைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை, இறுதியாக பேசுவதற்கு முன், "நீங்கள் என்னை உங்கள் சொந்த சகோதரனைப் போல நடத்த வேண்டும்; அப்போதுதான் இந்த பேச்சு முக்கியமாக இருக்கும் என்று கூறுவார்.

இருப்பினும், அவர் பேசத் தொடங்கும் போது, அவருடைய கவலை அவர்களின் குடும்ப நலனில் இல்லை என்பது தெளிவாக தெரியும். அதே சமயம், பாபி மீதான வெறுப்பும், பேபி மீதான வெறுப்பும், பெண்களை முதிர்ச்சியடையாதவர்களாகக் கருதும் ஆண்களின் போக்கிலிருந்தும், குடும்ப முடிவுகளை ஆண்கள்தான் எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலிருந்தும் தோன்றி, ஷாமியின் கேள்விகளில் ஒன்றிற்கு பேபி பதிலளிக்கும் போது எரிச்சலாக மாறுகிறது. அவருக்கு பதிலாக அவரது சகோதரி சிமி (கிரேஸ் ஆண்டனி) மாட்டிக்கொள்கிறார். இது அவரது நடத்தையில் ஆரம்ப மாற்றத்தைக் குறிக்கிறது. இறுதியாக "தயவுசெய்து என்னை அவமதிக்காதே, என்று கூறி  ஷம்மி ஒரு சோக உணர்வைக் காட்டி கெஞ்சுகிறார். அதற்கு பேபி பாபியின் நல்ல மனதை பற்றி குறிப்பிடும் போது அவரது பாணியில் மற்றொரு மாற்றம் ஏற்படும்போது ஷம்மி உடனடியாக "பாசமுள்ள சகோதரன்" என்ற நிலைக்கு மாறுகிறார்.

ஆனாலும் ஷம்மி தொடந்து தனது கட்டளையை பேபி மீது திணிக்க பாக்கிறார். ஆனால், பேபி அனைத்து வாதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், ஷம்மியின் நடத்தையில் மற்றொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்படையாக ஆத்திரமடைந்தாலும், அவர் தனது கோபத்தை சிரிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். இருப்பினும், ஷம்மி தனது கைகளை ஒன்றாகத் தேய்க்கும் விதம், பேபியை அறைய நினைக்கிறார் என்று புரிகிறது. தான் சொல்லும் அனைத்தையும் பேபி "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று சொல்லும்போது ஷம்மி கோபப்பட்டு சத்தம்போட தொடங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து ஷம்மி பேபியிடம் அவமரியாதையாகப் பேசத் தொடங்கும் போது, சிமி, ஷம்மியை தடுத்து எச்சரித்து, அவனைப் பிடித்துவிடுகிறான், இதனால் கோபமாகும் ஷம்மி அறையின் ஒரு மூலைக்குச் சென்று, சுவரை எதிர்கொண்டு, இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் பதற்றத்தை உருவாக்குகிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஷம்மி எதுவும் நடக்காதது போல் ஒரு வினோதமான புன்னகையுடன் திரும்புகிறார்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சி, ஷம்மியின் தலைக்குள் இருக்கும் எண்ணற்ற எண்ணங்களை ஃபஹத்தின் சித்தரிப்பு ஈடு இணையற்றது. அதிக வசனங்கள் இருந்தாலும், பகத் அனைத்தையும் தாண்டி தனது நடிப்பில் தனித்துவத்தை காட்டியுள்ளார். உணர்ச்சிகளுக்கிடையேயான அவரது தடையற்ற மாற்றங்கள் திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. காட்சி முழுவதும், ஷம்மியின் நடத்தை சாதாரணமாகவோ அல்லது மிகைப்படுத்தப்பட்டதாகவோ இருக்காது. ஆனாலும் பகத்தின் நடிப்பு மற்றும் கேரக்டரை பற்றிய ஆழமான புரிதலைக் காட்டுகிறது. இந்த குறிப்பிட்ட காட்சி சிக்கலான கதாபாத்திரங்களையும் அவர்களின் கொந்தளிப்பான உணர்ச்சிப் பயணங்களையும் கையாளும் அவரது திறமைக்கு சான்றாக விளங்குகிறது.

நிஜன் பிரகாசம் படத்தில் சத்யா சாப்பிடும் காட்சி

ஃபஹத்தின் புத்திசாலித்தனம் இந்தக் காட்சிகளைத் தாண்டியது என்று சொல்லலாம். பெங்களூரு டேஸ் படத்தில் சிவா கேரக்டரில் அவர் தன்னை மூழ்கடிக்கும் விதம், ஆழ்ந்த காதல் தருணத்தில் மனைவி திவ்யாவின் (நஸ்ரியா நஜிம்) கைகளில் உருகும் விதம் மற்றும் அன்னையும் ரசூலும் படத்திலல் ஆழ்ந்த சோகத்தை ரசூலாக மௌனமான, கண்ணீர் மற்றும் நோக்கமற்ற பார்வையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இறந்த காதல் அன்னாவின் (ஆண்ட்ரியா ஜெரேமியா) உடல், அவரது அசாதாரண நடிப்புத் திறனை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், நகைச்சுவையை மிக நுணுக்கமாக கையாள்வதில் பகத்தின் திறமை பாராட்டுக்குரியது. சத்யன் அந்திகாட் இயக்கத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் படத்தில், பிரகாஷனை (ஃபஹத்) அறிமுகப்படுத்திய பிறகு, ஒரு திருமண இடத்திற்கு இடத்திற்கு கதை நகர்கிறது. அங்கு இருக்கும் நாயகன், மங்கள வாத்யத்தை அவர் லாவகமாக தாலி கட்டி முடிந்தவுடன் அனைவரும் சாப்பிட செல்கின்றனர். அங்கு கேட் முன்பு அனைவரும் கூட்டமாக நிற்க அந்த கூட்டத்திற்கு நடுவே வரும் பகத் கேட்டை திறந்தவுடன் அவசரஅவசரமாக ஓடுகிறார்.

அங்கு சாப்பிட இடம் தேடி அலையும் பகத், மற்றொரு காலியான இருக்கையை விரைவாகக் கவனித்து, அதில் வேறு யாரும் அமர்வதற்கு அங்கு போய் அமர போக அங்கு ஒருவர் வந்துவிடுகிறார். அவரிடம் மதிய உணவுக்குப் பிறகு சென்னைக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று கூறி அமர்ந்துவிடுகிறார் பகத். உட்கார்ந்தவுடன், முதலில் அவசர அவசரமாக சாப்பிடும் பகத், ஒரு வீடியோகிராபர் மக்களைப் படம்பிடிக்க வரும்பொது மட்டும் ஒரு ஜென்டில்மேன் போல் மெதுவாக சாப்பிடுகிறார். வீடியோகிராஃபர் போதும்’ மீண்டும் வேகமாக சாப்பிடுகிறார்.

குறைந்த வசனங்களுடன் சராசரி மலையாளியின் அனைத்து நுணுக்கங்களையும் ஃபஹத் திறமையாக சித்தரித்துள்ளார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை திரையில் யாராலும் சித்தரிக்க முடியும் என்று ஒருவர் கருதினாலும், மலையாள சினிமாவில் ஏராளமான சத்யா காட்சிகள் இருந்தும் இதுவரை யாரும் மனதில் நிற்கவில்லை என்பது ஒரு நடிகராக அவரது திறமையை எடுத்துக் காட்டுகிறது. அவரது நடிப்பு, மனிதர்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்களை அவர் கூர்மையாகக் கவனிப்பது மற்றும் எளிமையானதாகத் தோன்றும் காட்சியை ஒரு அற்புதமான நகைச்சுவையாக உயர்த்தும் திறன் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த குணங்கள் ஃபஹத்தை ஒரு அற்புதமான நடிகராக மாற்ற உதவுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fahad Fazil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment