/tamil-ie/media/media_files/uploads/2023/07/Baakiyalskshmi.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமையல் வேலை காரணமாக பாக்யாவும், உறவினர் திருமணத்திற்காக கோபி – ராதிகாவும் பாண்டிச்சேரியில் ஒரே ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டை கணவரிடம் இருந்து வாங்குவதற்காக பாக்யா ஒரு பெரிய சமையல் ஆர்டருக்காக பழனிச்சாமியுடன் பாண்டிச்சேரி செல்கிறார். அதே திருமணத்திற்காக கோபி ராதிகா இருவரும் அங்கே வருகின்றனர். இவர்களை பார்த்து செல்வி ஷாக் ஆவதும், பழனிச்சாமி பாக்யாவை பார்த்த கோபி ஷாக் ஆவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
பழனிச்சாமி பாக்யா இருவரையும் பார்த்து கடுப்பாகும் கோபி பழனிச்சாமியை நேரில் பார்த்து எதுக்காக பாக்யா போற இடத்துக்கெல்லம் நீங்க வந்துட்டு இருக்கீங்க என்று கேட்டு சண்டை போடுகிறார். அப்போது மணமகனின் அப்பாவான தாடி பாலாஜி எதற்காக இவர் பழனிச்சாமியிடம் சண்டை போடுகிறார் என்று கேட்க அவர்தான் பாக்யா அக்கா புருஷன் என்று செல்வி சொல்கிறார். இதை கேட்டு அவர் ஷாக் ஆகிறார்.
இது முடிந்தவுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்போது தாடி பாலாஜியின் மனைவி இவர் தான் ராதிகாவின் புருஷன் என்று கோபியை காட்டுகிறார். இதை கேட்ட தாடி பாலாஜி மேலும் ஷாக் ஆகிறார். திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் கோபி ராதிகா சமையலுக்காக வந்திருக்கும் பாக்யா, அவருக்கு சப்போர்ட்டாக இருக்கும் பழனிச்சாமி என கதை நகர்வதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.