Advertisment

ராதிகாவை தள்ளிவிட்ட ஈஸ்வரி? கரு கலைந்ததால் கோபி கேட்ட கேள்வி : அடுத்து என்ன நடக்கும்?

கர்ப்பமாக இருந்த ராதிகா தவறி விழுந்துவிட்ட நிலையில், ஈஸ்வரி தான் தள்ளிவிட்டார் என்று கோபியிடம் சொல்லிவிட்டார்.

author-image
WebDesk
New Update
easwari Radhika

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதே போல் இந்த சீரியல் குறித்து அவ்வப்போது வெளியாகும் ப்ரமோக்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.

Advertisment

அந்த வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. கோபி 2-வது திருமணம் செய்துகொண்ட ராதிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவரது கர்ப்பம் ஈஸ்வரிக்கு பிடிக்கவில்லை என்றாலும், கூட, மகன் கோபி கூப்பிட்டதால், அவன் வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். இது ராதிகாவின் அம்மா கமலாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கோபி வீட்டில் மோதல் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஈஸ்வரியிடம் பேசிவிட்டு திரும்பும் ராதிகா, ஒரு பொருள் தடுக்கிவிட்டு கீழே விழுகிறாள். இதனால் அவரை அனைவரும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் நிலையில், டாக்டரிடம் கமலா என் பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, கரு கலைந்துவிட்டது என்று டாக்டர் சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைக்கின்றனர். அதே சமயம் உங்க அம்மாதான் என்னை தள்ளிவிட்டார் என்று கோபியிடம் சொல்கிறாள் ராதிகா.

மேலும் இந்த குழந்தை வேண்டாம் வேண்டாம் என்று உங்க அம்மா சொன்னாங்க, இப்போ குழந்தை இல்லாமலே போய்விட்டது என்று சொல்ல, ஈஸ்வரி, நான் அப்படி செய்வேனா கோபி என்று கேட்க, நீங்க நினைச்ச மாதிரியே குழந்தை இல்லாம போய்டுச்சில்ல என்று கோபி ஈஸ்வரியை குற்றம் சொல்ல, அதிர்ச்சியான ஈஸ்வரி, காலையில் பாக்யா கோலம்போட்டுக்கொண்டிருக்கும்போது அவரிடம் வந்து கரு கலைந்துவிட்டது என்று சொல்கிறார்.

அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதன் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இது கனவாக இருக்குமோ? அல்லது ஈஸ்வரியை வீட்டை விட்டு விரட்ட ராதிகா தொடங்கிய நாடகமா? உண்மையில் ராதிகாவின் கரு கலைந்திருந்தால், அடுத்து என்ன நடக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment