/indian-express-tamil/media/media_files/gWGocIMsVJfetxQIrS34.jpg)
பாக்யலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ஆகிவிட்ட கோபி. இப்போது மீண்டும் அப்பா ஆக போகும் விஷயத்தை எப்படி சொல்வது என்று தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தினசரி எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தாத்தா ஆகிவிட்ட கோபி, தற்போது ராதிகாவின் கர்ப்பதால் மீண்டும் அப்பா ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால் இந்த விஷயத்தை வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாம் விழித்துக்கொண்டிருக்கிறார்.
அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கும் ராதிகா, கர்ப்பிணிகள் என்னென்ன செய்வார்களே அதை செய்துகொண்டிருப்பதால், செல்விக்கு டவுட் வர தற்போது பாக்யாவுக்கும் டவுட் வந்து ராதிகாவிடமே கேட்டுவிடுகிறார். அவரும் தான் கர்ப்பமாக இருப்பதாக பாக்யாவிடம் சொல்லிவிட, பாக்யா அதிர்ச்சி அடைவதாக நேற்றைய எபிசோட்டில் காட்டப்பட்டது. பாக்யாவிடம் உண்மையை சொன்ன நிம்மியில் இருக்கிறார் ராதிகா.
இந்த வார ப்ரமோவில், வழக்கம்போல் ஹோட்டலில் ஆர்டர் குவிவதாக கோபி, பாக்யா முன்பு சீன் போட, வழக்கத்திற்கு மாறாக பாக்யா கோபியிடம் கோபமாக நடந்துகொள்கிறார். அதன்பிறகு ரூமுக்கு வரும் கோபி, பாக்யா ஏன் ரொம்ப கோபமாக நடந்துகிறா என்று கேட்க, நான் கர்ப்பமாக இருப்பது பாக்யாவுக்கு தெரியும் என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு பாக்யா கோபி தனக்கு செய்த அனைத்தையும் நினைத்து பாக்கிறார்.
பாக்யாவை சந்திக்கும் ராதிகா உங்களுக்கு எதும் பிரச்சனை இல்லையே என்று கேட்க, நீங்க எதை பற்றியும் திங் பண்ணாதீங்க. எனக்கு சந்தோஷம்தான் என்று சொல்ல, ராதிகா நிம்மதியாகிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதன் மூலம் வரும் எபிசோடுகளில், ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்திக்கு ராதிகாவின் கர்ப்பம் குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.