கிண்டல் செய்த பாக்யா... கோபியை தும்சம் செய்த ராதிகா : இன்னும் என்னலாம் நடக்குமோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

விஜய்டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்யாவுக்கு எதிராக ரெஸ்டாரண்ட் தொடங்கி தற்போது பாக்யாவிடமே சாப்பாடு டெலிவரி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கோபி.

Advertisment

பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கு செஃப் வராததால், ஈஸ்வரி பாக்யாவிடம ஆர்டர் சொல்ல, பாக்யா யாருக்கோ என்று நினைத்தக்கொண்டு, சாப்பாடு டெலிவரி கொடுப்பதற்காக கோபியின் ரெஸ்டாரண்ட்க்கு வந்தார். அதனைத் தொடர்ந்து நீ எப்படி இங்க வந்த என்று ஈஸ்வரி கேட்க, உங்க ஆட்கள் தான் லொக்கேஷன் அனுப்பி டெலிவரி பண்ண சொன்னாங்க என்று சொல்கிறாள் பாக்யா.

அதன்பிறகு யாரோ ஒருவர் ரெஸ்டாரண்ட் நடத்த பிஸினஸ் மட்டும் தெரிந்தால் போதும், சமைக்க தெரியனும் என்று அவசியம் இல்லை என்று சொன்னார். ஆனால் இப்போ என்ன ஆகியிருக்கு, பிசினஸ் தெரியலனா காத்துக்கலாம் ஆனால் சமையல் அப்படி இல்ல என்று சொல்ல, கோபி கடுப்பாகிறான். இதனால் அங்கிருந்து கிளம்ப, தடுத்து நிறுத்தும் பாக்யா பணம் என்று கேட்க, அதெல்லாம் அக்கவுண்டில் வரும் என்று சொல்கிறான்.

இதை கேட்ட பாக்யா நம்பலமா என்று கேட்க, கோபி டென்ஷனாகி அங்கிருந்து கிளம்புகிறான். ஈஸ்வரியையும் கலாய்த்துவிட்டு பாக்யாவும் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். வீட்டுக்கு வந்த பாக்யா, அமிர்தா, ஜெனி, எழில் என அனைவரிடமும் கோபிக்கு சாப்பாடு கொடுத்தது பற்றி பேசிக்கொண்டிருக்க, அப்போது சமைப்பதற்காக வரும் ராதிகாவிடம், என்ன மேடம் சாப்பிலையா, நீங்களும் கோபி சார் மாதிரி பாக்யா அக்காவிடம் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்ல என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சியாகிறார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு செல்வ நடந்த விஷயங்களை சொல்ல, இதை கேட்டு கோபத்தில் மாடிக்கு செல்லும் ராதிகாவிடம், கோபி, ஜாலி மூடில் பேசுகிறார். அப்போது ராதிகா செஃப் வரலைனு சொன்னீங்க அப்புறம் எப்படி எங்க ஆபீஸ்க்கு சாப்பாடு சரியாக டைம்கு வந்தது என்று கேட்க, அம்மா வந்து செஞ்சி கொடுத்தாங்க, உன் புருஷனை பத்தி என்ன நினைச்ச என்று கேட்க, ராதிகா கடுப்பாகி கோபியின் காதை பிடித்து திருகுகிறாள்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையே போயும் போயும் பாக்யாவிடம் சாப்பாடு வாங்கியிருக்கீங்கஎன்று கேட்க, அம்மாதான் இப்படி பண்ணாங்க என்று கோபி அம்மா மீது பழியை போடுகிறான். இதை கேட்ட ராதிகா, ஈஸ்வரியிடம், அவங்ககிட்ட எதுக்கு ஆர்டர் கொடுத்தீங்க, என்று கேட்க, ஏன் நீ வந்து கோபிக்கு உதவி பண்ணல என்று பதிலுக்கு கேள்வி கேட்கிறாள் ஈஸ்வரி. இருவரும் வாக்குவாதம் பண்ண ராமமூர்த்தி சமாதானப்படுத்துகிறார்.

அதன்பிறகு கோபி தண்ணீர் பிடிப்பதற்காக கிச்சன் போக, எழில் பாக்யா இருவரும் அவனை கிண்டல் செய்ய கோபி என்ன செய்வது என்று தெரியால் திகைத்து நிற்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: