Advertisment

ஈஸ்வரிக்கு எச்சரிக்கை... கோபிக்கு ஷாக்... தொடரும் ராதிகா அம்மாவின் வன்மம்

ராதிகா அம்மாவும் இனிமே எதாவது பிரச்சனை நடந்தா மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்.

author-image
WebDesk
Jun 08, 2023 15:38 IST
Baakiyalskhmi

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு

விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவை வெளியில் தள்ளியது குறித்து கேட்க ராதிகாவின் அம்மா போலீசுடன் கோபி வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் ராதிகாவின் அம்மாவுக்கும் கோபி அம்மாவுக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கோபியிடம் போலீசார் யார் உங்கள் மனைவி என்று கேட்கிறார். அதற்கு கோபி என்ன சொல்வது என்று தெரியாம் விழிக்க நேற்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில்,

ராதிகா நீங்க தாளி கட்டுன பொண்டாட்டி தானே என்று ராதிகாவின் அம்மா அதட்டி கேட்க, கோபியும் ஆமாம் என்று சொல்லிவிடுகிறார். அதை கேட்டு ராதிகாவின் அம்மா அதான் உங்க புள்ளையே ராதிகா என் பொண்டாட்டினு சொல்லிட்டாரே அதுக்கப்புறம் ராதிகா இந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்ல நீங்க யாரு என்று ஈஸ்வரியிடம் கேட்கிறார்.

ஆனால் ஈஸ்வரி பாக்யாதான் எங்கள் மருமகள் என்று சொல்ல எங்கையாவது இப்படி நடக்குமா? டைவர்ஸ் பணண பிறகும் இவ இங்கே இருக்கா என் மகளை வெளியில் அனுப்பி அவளை மீண்டும் கோபியோடு சேர்த்து வைக்க ப்ளான் பண்றாங்க என்று ராதிகாவின் அம்மா சொல்ல ஆமாம் நான் அப்படித்தான் பண்ணுவேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

இதனால் ரெண்டுபேருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற போலீஸ் கோபியிடம் வீடு யார் பேரில் இருக்கிறது என்று கேட்கிறார். என் பெயரில் தான் இருக்கு என்று கோபி சொல்ல, இந்த வீடு கட்ட பெரும் பணத்தை நான் கொடுத்திருக்கிறேன் என்று கோபியின் அப்பா சொல்கிறார். எங்க பிள்ளை எங்களை விட்டு போனப்போ எங்க மருமகள் தான் எங்களை நல்ல பாத்துக்கிட்ட என அனைவரும் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்கின்றனர்.

இவுங்க இங்க இருக்கனுமா வேண்டாமா அது பிரச்சனை இல்லை. ராதிகா இங்க இருக்க எல்லா உரிமையும் உண்டு நீ உள்ளே போமா எதாவது பிரச்சனைனா எனக்கு போன் பண்ணு என்று போலீஸ் சொல்லிவிட்டு செல்கிறது. ராதிகா அம்மாவும் இனிமே எதாவது பிரச்சனை நடந்தா மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்கிறார். கோபியிடமும் மாப்பிளை பொண்ணு பத்திரம் என்று சொல்கிறார்.

அனைவரும் சென்றபின் கோபி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கிறார். ஈஸ்வரியும் கோபியின் அப்பாவும் கோபியை திட்டி தீர்க்கின்றனர். நீ நிம்மதியா இருக்கனும்னு ஆசைப்பட்டா அந்த ராதிகாவை தலைமுழுகு என்று சொல்லிவிடுகிறார் கோபியின் அப்பா. ஈஸ்வரியும் ராதிகா உன்னையும் இனியாவையும் பிரிக்க ப்ளான் போடுறா அதை பார்த்துவிட்டு சும்மா இருக்கனுமா என்று கேட்கிறார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் மாடிக்கு சொல்லும் கோபி ராதிகாவிடம் நீ எப்படி எங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியோ போக சொல்லலாம் என்று கேட்க,  சூப்பர் கோபி. உங்க அம்மா பேச்சைக்கேட்டு இங்க வந்து கேட்குறீங்களா என்று கேட்கும் ராதிகா,  என்னையும் உங்களையும் பிரிக்க போறேன் உங்கம்மா சொல்றாங்க. காபி கொடுக்கலாம் போன கப்பை தட்டி விடுறாங்க என சொல்கிறார்.

அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment