Advertisment

பாக்யா கொடுத்த அதிர்ச்சி... நெஞ்சை பிடித்த கோபி... ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்

பழனிச்சாமியிடம் பேச அவரோ தனக்கு இனிமேல் இதற்கு கல்யாணம் தனியாகவே இருந்துட்டுபோறேன் என்று சொல்கிறார்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பாக்யா வீட்டுக்கு பழனிச்சாமி பொண்ணு பார்க்க வருவதை கேட்டு கோபி ஷாக் ஆகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இதனிடையே இன்றைய எபிசோட்டில், பாக்யா பழனிச்சாமி அம்மாவை சந்திக்கும்போதெல்லாம். மகனின் திருமணம் குறித்து வருத்தப்படுவதால் பழனிச்சாமிக்கு பெண் பார்ப்பதாக வாக்குறுதி கொடுக்கும் பாக்யா, வீட்டுக்கு வந்து தனது மாமனார் ராமமூர்த்தியிடம் நடந்ததை சொல்கிறார். அப்போது ராமமூர்ததியின் சொந்தக்கார பெண் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். அவளை பெண் பார்த்துவிடலாம் என்று பழனிச்சாமிக்கு பாக்யா சொல்கிறார்.

இதற்காக பழனிச்சாமியிடம் பேச அவரோ தனக்கு இனிமேல் இதற்கு கல்யாணம் தனியாகவே இருந்துட்டுபோறேன் என்று சொல்கிறார். ஆனாலும் பாக்யா பெண் பார்க்க அம்மாவை அழைத்துக்கொண்டு வருமாறு சொல்கிறார். அடுத்து இங்கிலீஷ் க்ளாசில் பாக்யா, பழனிச்சாமி லோபிகா மூவரும் அரட்டை அடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமி தனது அம்மாவுக்கு ஏதோ சாப்பாடு செஞ்சு தர்றேன் சொன்னீங்களாமே. அது எப்படின்னு சொன்னா நான் செஞ்சுருவேன். இல்லன்னா வீட்ல வேலை பார்க்கிறவங்களை வைச்சு செய்ய சொல்லுவேன். அம்மா கேட்டுட்டே இருக்காங்க என்று சொல்கிறார்.

இதை கேட்டு பாக்யா நானே செஞ்சி கொடுக்கிறேன். க்ளாஸ் முடிச்சி கேண்டீன் போய்ட்டு செஞ்சி எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதேபோல் க்ளாஸ் முடிச்சு லொபிகாவும் பாக்யாவும் கேண்டீன் போக, மறுப்பக்கம் ஆபீஸில் இருந்து வரும் எழில் கிச்சனில் அமிர்தாவுடன் ரோமான்ஸ் செய்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஜெனி நான் எதுவும் பார்க்கவில்லை என்று கூறி வெட்கத்தில் மாடிக்கு சென்றுவிடுகிறார். அமிர்தாவும் எழிலை ஆபீஸ்க்கு விரட்டி அடிக்கிறார்.

அதன்பிறகு பாக்யாவும் லோபிகாவும் பழனிச்சாமி அம்மாவுக்காக தேங்காய் சாதம் செய்து எடுத்துச்செல்கின்றனர். அதை சாப்பிட்ட அவர் நான்றாக இருக்கு என்று சொல்லி பழன்னிசாமிக்கு பெண் பார்க்கும் விஷயம் குறித்து கேட்கிறார். பாக்யாவும் சீக்கிரம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். வீட்டுக்கு வரும் பாக்யா ராமமூர்த்தியிடம் இது குறித்து சொல்ல அப்போது அவரது நண்பர் ஒருவர் பேசுகிறார். அவருடைய பெண் தான் பழனிச்சாமிக்கு பேச இருப்பதால நாளைக்கு பெண் பார்க்கலாம் என்று முடிவு செய்து பழனிச்சாமிக்கு சொல்கின்றனர்.

இதை கேட்டு பழனிச்சாமி இதெல்லாம் எதற்கு என்று கேட்க,  நமக்குன்னு ஒரு துணை வேணாமா என கேட்கிறார். ஏன் சார் நம்ம கல்யாணம் பண்ணிக்ககூடாது என கேட்கிறார் பாக்யா. அந்த சமயத்தில் கோபி வர, அவள் பேசுவதை கேட்டு ஷாக் ஆகி நெஞ்சை பிடிக்கிறான் கோபி அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment