Advertisment

பணப் பிரச்னை... அவமானப்படுத்தும் ராதிகா... கோபி அடுத்து என்ன செய்வார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalskhmi

பாக்கியலட்சுமி சீரியல்

சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் கோபி இனியாவை பிபிஎம் சேர்ப்பதற்காக அப்ளிக்கேஷனுடன் வீட்டிற்கு வருகிறார். ஆனால் இனியா நான் விஸ்காம் படிக்க போகிறேன் என்று சொல்லிவிடுகிறாள். ஆனால் அது உனக்கு செட் ஆகாது என்று கோபி எவ்வளவோ சொன்னாலும் இனியா அவளது முடிவில் தெளிவாக இருக்கிறாள். அதனால் கோபமாகும் கோபி வீ்ட்டில் உள்ள அனைவரையும் திட்டகிறார்.

இதற்கு பதில் கொடுக்கும் எழில், இனியா அவளுக்கு பிடித்ததை தான் படிப்பா என்று சொல்ல, நீ விஸ்காம் படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாம இருக்க மாதிரி இனியாவும் இருக்கனுமா என்று கேட்க,  அதான் இனியா விஸ்காம் படிக்க போறதா சொல்றால்லா. அது அவள் முடிவு எடுத்தது. அதை படிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பாக்யா கேட்கிறாள்.

அந்த நேரத்தில் போன் வரவும் பாக்யா வெளியே சென்று போன் பேசிக்கொண்டிருக்கிறாள். அதை பார்த்து கோபி இடியட் இடியட் என்று திட்ட, என்ன சொன்னீங்க என்று பாக்யா கேட்கிறாள். அதற்கு கோபி உன்னைத்தான் திட்டிக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறான். மேலும் குழந்தைகள் ஆசைப்படுவதை எல்லாம் செய்யக்கூடாது. அவளுக்கு ஃபியூச்சர்க்கு எது சரியோ அதைதான் செய்யயும் படிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கோபி பாக்யாவிடம் கேட்கிறான்.

முன்ன பின்ன காலேஜ் பக்கம் போயிருக்கியா. காலேஜ் பஸ் பார்த்து இருக்கியா? என்று கோபி கிண்டல் செய்ய, பாக்யா அமைதியாக இருக்கிறாள். அதன்பிறகு இனியாவோட ஃபியூச்சர் மட்டும் கெட்டுப் போனால் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் என்று கோபி சொல்கிறார். அப்போது ராதிகா போன் பண்ண, கோபி ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.

அடுத்து வீட்டுக்கு போகும் கோபியிடம் ராதிகா தனது கோபத்தை காட்ட, கோபி என்ன என்று விசாரிக்கிறான் அப்போது ராதிகா, உங்களால பாக்கியாவை மறக்க முடியாமல் அவகிட்ட பேசாமல் இருக்க முடியலையா? என்று கேட்கஅப்ளிகேஷனை காட்டி நான் இனியாவை பிபிஎம் படிக்க வைக்க ஆசைப்பட்டா, அவங்க விஸ்காம் படிக்க வைக்க முடிவெடுத்துட்டாங்க. அதுதான் அவகிட்ட புடிச்சு திட்டிக்கொண்டு இருந்தேன் என்று சொல்ல, ராதிகா சாரி தெரியாம தப்பா நினைச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்த நாள் காலையில் பாக்யா இனியாவை கூட்டிட்டு காலேஜுக்கு கிளம்பி போகிறார். அப்போது செழியன் பணம் இருக்கா? நான் வேண்டுமென்றால் கொடுக்கட்டுமா? என்று பாக்யா, அதெல்லாம் வேண்டாம் பணம் இருக்கு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்து கோபி இனியாவுக்கு அட்மிஷன் போடணும் பீஸ் கட்ட பணம் வேண்டுமே என்று அக்கவுண்டை பார்க்க அவர் அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் தான் இருக்கிறது.

இதனால் பீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய் தேவை என்பதால் ஆபீஸ்க்கு போன் செய்து  ஐம்பதாயிரம் ட்ரான்ஸ்பர் செய்ய சொல்கிறான். ஆனால் ஆபீஸ் அக்கவுண்டில் பணம் இல்லை என்று சொல்கின்றனர். இதனால் அதிர்ச்சியாகும் கோபி, ராதிகாவிடம் கேட்கலாம் என்று போக, நீங்க பணம் கட்டுவதை நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் இதையெல்லாம் நான் தடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள்.

பணம் கேக்குறதுக்கு முன்னாடியே கிளம்பி போய்ட்டாளே என்று புலம்பும் கோபி,  இப்ப பணத்துக்கு என்ன பண்றது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment