Advertisment

ராதிகா மீது சந்தேகப்பட்ட கோபி : ஈஸ்வரிக்கு அடுத்து என்ன நடக்குமோ : பாக்யலட்சுமி சீரியலில் இன்று!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalasmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், வீட்டில் காலிங் பெல் அடிக்க, கதை திறந்த கமலாவுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக கோபி ஈஸ்வரியுடன் நிற்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கமலா என்ன மாப்ளே உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு வந்துருக்கீங்க என்று மறைமுகமாக கேட்க, உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, எங்க அம்மா என் கூடத்தான் இருப்பாங்க என்று கோபி ஸ்ரிக்டாக சொல்லிவிடுகிறான்.

அவங்க என் அம்மா அவங்க என்னை நல்லா பாத்துக்கிட்டாங்க நான் அவங்களை நல்லா பாத்துக்கொள்வேன். நீங்க அவங்களுக்கு அது பண்ணணுமோ இது பண்ணணுமோ என்று யோசிக்க வேண்டாம். அவங்கள நல்லபடியா பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சொல்ல, கமலா அதிர்ச்சியில் உறைந்துபோகிறாள். மறுபக்கம், பாக்யா வீட்டில், ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் ஒரு மாதிரியாக இருக்க, எழில் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறான்.

இதை கேட்ட பாக்யா, பாட்டியை நினைத்து தாத்த கவலையாக இருக்கிறார் என்று சொல்ல, அந்த வீட்டுக்கு போய் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள 2 முறை லொ சுகர் ஆகிடுச்சி. திரும்பவும் அதுமாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு என்று சொல்ல, அவதான் புள்ள பாசத்தில் ஆடுறா அதுக்கு நாம என்ன பண்ண முடியும். அவனோட அயோக்கத்தனம் தெரிஞ்சி அவளே வரணும். அதுவரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது என்று ராமமூர்த்தி சொல்லிவிடுகிறாள்.

அடுத்து ரெஸ்டாரண்டில் ஊழியர்கள் லீவில் சென்றுவிட, எல்லா வேலைகளையும் கோபி செய்து முடிக்கிறான். மறுப்பக்கம் பாக்யா தனது ரெஸ்டாரண்டில் கணக்கு பார்த்துக்கொண்டிருக்க, அங்கு வரும் பழனிச்சாமி, ஆரஞ்சு ஜூஸ் சொல்லி பாக்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அடுத்து நான் இனி எப்போதும் உங்கள் பக்கத்தில் தான் இருப்பேன். பக்கத்து கடையை நான் வாடகைக்கு எடுத்துட்டேன் என்று மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கிறான் பழனி.

மேலும் உங்க ரெஸ்டாரண்டில் கிடைக்காத பொருள் எல்லாம் என் கடையில் கிடைக்கும் என்று சொல்ல, சூப்பர் சார் என்று பாக்யா பாராட்டுகிறாள். அடுத்து கமலா சத்தமாக டிவி பார்த்துக்கொண்டிருக்க, சவுண்ட கம்மி பண்ணுமா என்று ராதிகா சத்தம் போட, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று கமலாவை திட்டிவிட்டு, ஈஸ்வரி ரூமுக்கு சென்று, அத்தை நீங்கள் வெளியில் வரவே இல்லை அதன் பார்க்க வந்தேன் என சொல்கிறாள்.

ராதிகாவின் பேச்சை கேட்ட ஈஸ்வரி, ஏன் நான் செத்துட்டேனு பார்க்க வந்தியா என்று கேட்க, அப்போது கோபி உள்ளே வர, ராதிகாவின் கை ஈஸ்வரியின் மேலே இருப்பதை பார்த்து, அதிர்ச்சியில் எங்க அம்மாவை என்ன பண்ணபோற என்று கேட்க, பதிலுக்கு நான் என்ன பண்றேன் என்று ராதிகா கேட்க, அவங்க மாத்திரை போட்டாங்களானு கேட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, நீ என் அம்மாவை ஏதோ பண்றமாதிரி இருந்துச்சு என்று கோபி சொல்ல, ராதிகா ஷாக் ஆகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment