Advertisment

சென்னையில் நிருபராக மாறிய பாரதி கண்ணம்மா அருண்: விதி மீறிய கார் டிரைவரை விரட்டி எடுத்த வீடியோ

அருண் பிரசாத் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அருண் பாரதி நிரூபராக மாறியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arun Prasad

அருண் பிரசாத்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அருண் பிரசாரத் (பாரதி) விதியை மீறி காரை ஓட்டிய டிரைவரை விட்டி பிடித்து வீடியோ எடுத்துள்ள நிகழ்வு தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அருண் பாரதி. இந்த சீரியலில் டாக்டர் பாரதி என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சீரியலை தொடர்ந்து பார்த்த இல்லத்தரசிகர்கள் மத்தியில் பாரதிக்கு கடுமையாக எதிர்ப்புக்கள் இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அவர் மனதை வென்றார்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்து அதன் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணம்மாவாக விணுஷா தேவி தொடர்ந்து நடித்து வரும் நிலையில், பாரதி கேரக்டரில் ரோஜா சீரியலின் நாயகன் சுப்பு சூரியன் நடித்து வருகிறார். முதல் பாகத்தை போலவே 2-வது பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

arun prasad

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்

இதனிடையே முதல் சீசனின் நாயகன் அருண் பிரசாத் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அருண் பாரதி நிரூபராக மாறியுள்ளார் என்று கூறி வருகின்றனர். உங்கள் உயிர் மேல் கொஞ்சம் கூட அக்கரை இல்லையா,? அதுவும் இந்த வேன் டிரைவர்ஸ் இருக்காங்களே மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதே அவரின் வேலையாக போய்விட்டது என்று அருண் பிரசாத் வீடியோ ஆதராத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களாக அனைத்து பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது ஒரு வேன் டிரைவர் பல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக கடந்து சென்றுள்ளார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே டிரைவர் வேனை ஓட்டி சென்றுள்ளார்.

இந்த நிகழ்வை பார்த்த அருண் பிரசாத் உடனாடியாக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ எடுக்கும்போது வேன் டிரைவரிடம் வேகம் குறைத்து ஓட்டுங்கள் என்று சொல்லும்போது அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். ஆனால் அந்த வேனில் பல உயிர்கள் பயணித்துக்கொண்டிருக்கதை அவர் பொருட்படுத்தவே இல்லை என்று பதிவிட்டுள்ள அருண் பிரசாத் அந்த வேணின் நம்பரை வைத்து புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment