சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6-ல் நடிகர் அசீம் சாம்பியனாக வெற்றி பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் நடந்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ரக்ஷிதா, ஜி.பி.முத்து, அசீம், சாந்தி உள்ளிட்ட சிலர் மட்டுமே பிரபலமானவர்கள்.
20 போட்டிகயாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார். நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த நந்தினி 4-வது இடம் பிடித்தார். இதில் முதல் இடத்திற்கான போட்டியில் அசீம் விக்ரமன் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், இறுதியில் அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த முடிவு பல பிக்பாஸ் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த முடிவு தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கே பிடிக்கவில்லை என்றெல்லாம் தகவல்கள் வெளியானர். இதற்கு முக்கிய காரணம் அசீமின் நடத்தை. பிக்பாஸ் வீட்டில் தவறாக நடந்துகொள்வது, பேசுவது உள்ளிட்ட பல செயல்களால் அவரை விரைவில் எலிமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது பேட்டி அளித்துள்ள மைனா நந்தினி, இது குறித்து பேசியுள்ளார். முதல்முறை அசீம் ஆயிஷா விஷயத்தில் தவறு செய்யும்போது மச்சா நீ எல்லமே நல்ல பண்ற ஆனா கோவத்தில் டக் டக்னு வார்த்தை விட்டர அதை மட்டும் சரி செய்துவிட்டால் நீ சூப்பரான ஒரு பர்சனா இருப்படா. அவனுக்குள் ஒரு சூப்பர் டூப்பர் கேரக்டர் இருக்கும்.
கோபத்தில் தான் வார்த்தைகள் வருமே தவிர மனதில் இருந்து வராது. கோபத்தில் பேசினாலும், கோபம் தனிந்தவுடன் அவர்களிடமே இயல்பாக பேச தொடங்கிவிடுவான். நான் கோவத்தில் இருக்கும் அசீமாக பார்க்கவில்லை. கோவத்திற்கு பிறகு ஒரு முகம் இருக்கு அந்த அசீம் எனக்கு பிடிக்கும். அந்த அசீம்காக நான் டன். அதன்பிறகு நான் டா சொல்லி கூப்பிடும்போது கூட ஓகே ஓகே என்று சொல்லிவிட்டான்.
நம்ம ப்ரண்ஷிப் குள்ள இதெல்லாம் இருக்கும்ல அதே மாதிரிதான். நம்ம ப்ரண்டு தப்பு பண்ணா ஒரு ப்ரண்டா சொல்லது இயல்பான விஷயம்தான். அந்த விஷயம்தான் உள்ள நடந்துச்சு என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/