தமிழ் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இவ்வளவு நாள் காமெடியாக பேசி சிரித்துக்கொண்டிருந்த கூல் சுரேஷ் இன்று திடீரென கோபமாகிய ப்ரமோ வைரலாகி வருகிறது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறான பல விஷயங்கள் உள்ளது. அதிகப்படியான இளைஞர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் 2 வீடு 2 பிரச்சனை, 2 நாமினேஷன் என வித்தியாசமாக நிகழ்ந்து வருகிறது.
18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அனன்ன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது 16 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் சிலர் ஸ்மால் பாஸ் வீட்டிலும் சிலர் பிக்பாஸ் வீட்டிலும் வசித்து வருகின்றனர். அதே சமயம் நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.
இதனிடையே நிகழ்ச்சியில் 18-வது நாளான இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் கொடுத்த அறிக்கையை படிக்கும் ரவீனா, இது ஒரு சாபக்கல். எந்த நபருக்கு இந்த சாபக்கல் போய் சேர்கிறதோ, அவர்கள் ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அடுத்த வாரம் டேரக்ட் நாமினேஷன் செய்யப்படுவார் என்று சொல்கிறார். இதை கேட்ட சரவண விக்ரம் பயங்கரமான சாபமா இருக்கே என்று சொல்கிறார்.
இதன் பிறகு ஹவுஸ்மெட்ஸ் அனைவருமே கூல் சுரேஷ்க்கு தான் அந்த கல் போய் சேர வேண்டும் என்று சொல்ல, இதனால் கோபமாகும் கூல் சுரேஷ் நான் சீரியசாகத்தான் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும் அதுக்கு நீங்க என்னை சொல்லுவீங்க. ஏமாந்த ஆளு என்னை மட்டும் வச்சி செய்ங்கப்பா, நானே கல்லை எடுத்துக்கிறேன் என்று சொல்ல, சிலர் அண்ணா என்று எதோ சொல்ல வர கூல் சுரேஷ் கோபத்தில் இருங்க என்று கத்துகிறார்.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நேற்று கூல் சுரெஷ் அனைவரையும் கலாய்த்ததற்கு இப்போது சாபத்தை பெற்றுக்கொண்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“