/tamil-ie/media/media_files/uploads/2022/01/Biggboss.jpg)
Tamil Biggboss Update : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர் அபினய்யின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை நீங்கியுள்ளது பெரும் குழப்பைத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் வைல்கார்டு என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் உள்ளே வந்த நிலையில், வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர்
அந்த வகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குறைந்த வாக்குகள் பெற்ற அபினய் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அபினய் மற்றும் பாவனி இருவருக்கும் இடையே ஒரு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட ஆகியிருந்தது. இதை பார்த்து சக போட்டியாளராக ராஜூ நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சர்ச்சை குறித்து அபினய் மற்றும் பாவனி இருவருமே வாய் திறக்காத நிலையில், தொகுப்பாளர் கமல்ஹசன் இருவரையும் கண்டித்தார். அதனைத் தொடர்ந்து கணவருக்கு ஆதவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட அபினய் மனைவி அபர்ணா, அபினய் பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளேன் அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று அபினய்க்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பதிவை வெளியிட்டிருந்தார். .
தற்போது வாக்குகள் குறைவாக வாங்கியதால் அபினய் வெளியேற்றப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் விட என் குடும்பம்தான் என்று அபினய் குறிப்பிட்டிருந்தார் , தற்போது திடீரென அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். இதுவரை அபர்ணா அபினய் என்று இருந்த பெயர் தற்போது அபர்ணா வரதராஜன் என்று மாறியுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், இது குறித்து யார் விளக்கம் அளிப்பார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.