ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந்தேதி தொடங்கிய நிலையில் 7-வது நாளான நேற்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பங்கேற்கும் இரண்டாம் நாள் எபிசோடு ஒளிபரப்பபட்டது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு டீம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து போட்டியாளர்களின் கருத்தை கேட்டறிந்தார் கமல்ஹாசன்.
அதன்பிறகு அனைத்து போட்டியளர்கள் குறித்து கருத்துக்களை சொல்லுமாறு அபிஷேக் ராஜாவிடம் கூறினார். அனைவரின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்த அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி பற்றி கூறிய கருத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார்.ஆனாலும் இது தொடர்பாக அவர் எவ்வித அதிருப்தியும் வெளிப்படுத்தவில்லை. அதன்பிறகு பிரியங்கா தனது அங்காவை போல் இருப்பதாக கூறிய அபிஷேக், சின்ன பொண்ணு தனக்கு அம்மா மாதிரி என்றும் தினமும் அவரிம் ஆசீர்வாதம் வாங்குவதாக்வும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்களிடம் குக்கிங் டீம் போனதால் தான் வீட்டில் பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறினார்.
இதனத் தொடர்ந்து போட்டி நடத்திய கமல், போட்டியாளர்கள் அனைவரும் யாராவது 4 பேருக்கு காரணம் சொல்லி லைக் மற்றும் டிஸ்லைக், கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை அனைவருமே செய்திருந்தபோது, அக்ஷராவிற்கு போட்டியாளர்களில் பெரும்பாலானோர் டிஸ்லைக் கொடுத்தனர். அதற்கு காரணமாக அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை என காரணம் கூறினர். மேலும் ஒரு சிலரின் கருத்தை சிலர் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதில் தனக்கு அதிகப்படியான டிஸ்லைக் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அக்ஷரா, சின்ன பொண்ணுவிடம் சொல்லி அழுதார். இதை பார்த்து இசைவாணி, மதுமிதா ஆகியோர் தாங்கள் டிஸ்லைக் கொடுத்தற்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்தியும் பேசியுள்ளனர். அதன்பிறகு டிஸ்லைக் கேம் பற்றி அதே சமயம் ரூமிற்குள், பிரியங்காவிடம் கேட்கிறார் தாமரைச்செல்வி. இதற்கு விளக்கம் கொடுக்கும் பிரிய்ங்கா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், யாருடைய மனமும் புண்படுமோ என பார்க்க கூடாது என சொல்கிறார். நிரூப்பும், நீங்கள் பாசம் வைத்திருந்தாலும் வேறு வழியில்லை. டிஸ்லைக் கொடுத்து தான் ஆக வேண்டும் என சொல்கிறார்.
இன்னும் 9 போட்டியாளர்கள் தங்களின் அறிமுகத்தை கொடுக்க வேண்டிய நிலையில், முதல்வாரத்தின் இறுதியில், போட்டியாளர்களிடம் ஒற்றுமையை குளைத்துள்ளார் பிக்பாஸ். மேலும் வரும் வாரத்தில் எலிமினேஷ் ப்ராசஸ் நடக்கும் என்பதால் அடுத்து பிக்பாஸ் வீட்டில் என்னென்ன அரங்கேறும் என்பது குறித்து பெரும் எதிர்பார்க்கு எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil