பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். முதல் வாரத்தில் அனன்யாக வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்களில் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து தானாக முன்வந்து வெளியேறினார். இதனால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.
தொடர்ந்து தற்போது 3-வது வாரத்திற்கான எலிமினேஷன் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வாரம், அக்ஷையா, நிக்சன், மணி, விசித்ரா, ஐஷூ, விஜய், மாயா? பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகிய 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், இவர்களில் வினுஷா, மாயா, அக்ஷயா ஆகிய மூவரும் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இந்த வாரத்தில் இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அபாய கட்த்தில் இருந்த 3 பேருமே தப்பித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இன்றைய எபிசோட்டில் உண்மை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“