என் குடும்பத்திற்கே நான் அவமானம்... பிரதீப், விச்சுமாவுக்கு நன்றி : பிக்பாஸ் ஐஷூ உருக்கம்

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஐஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஐஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
Ayshu Bgg Boss

பிக்பாஸ் ஐஷூ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஷூ,  தான் பிக்பாஸ் வீட்டில் நடந்துகொண்ட முறை குறித்தும் தான் செய்த தவறுகள் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் ஐஷூ வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து நிக்சனுடன் நெருக்கமாக இருந்த ஐஷூ எந்த டாஸ்கிலும் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாயா டீமுடன் சேர்ந்து விசித்ரா அன்கோவுடன் மோதலில் ஈடுபட்டது என பல விமர்சனங்களை பெற்றிருந்தார்.

அவர் பிக்பாஸ் விட்டில் நடந்துகொள்ளும் முறையை பார்த்த ஐஷூவின் பெற்றோர்கள் இந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம் என்று இணையத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும் நிக்சன் ஐஷூ இருவரும் கண்ணாடி முன்பு நின்று முத்தம் கொடுப்பது போன் பாவனைகள் இல்லாம் பரபரப்பின் உச்சமாக சென்றது. இதனிடையே எங்கள் மகளை வெளியே அனுப்பிடுங்க என்று ஐஷூவின் பெற்றோர்கள் பிக்பாஸ் குழுவிடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர் கடந்த வாரம் வெளியேற்றப்படடார்.

விசித்ரா சொல்லித்தான் ஐஷூ வெளியேற்றப்பட்டார் என்று நிக்சன் அவருடன் சண்டை போட்டு பரபரப்பாக்கினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஐஷூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் என் குடும்பத்திற்கே அவமானம். என் உயிரை விடமும் முடிவெடுத்துவிட்டேன். ஆனால் என் பெற்றோர் என் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காக இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

Advertisment
Advertisements

அந்த வீட்டில் காதல், நட்பு என சில விஷயங்கள் என் கண்களை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். என்னை நம்பிய அனைவருக்கும் நான் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளேன். நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது, நிகழ்ச்சியில் என்னைப் பார்த்ததும் என் மீது எனக்குள்ள மரியாதையை இழந்துவிட்டேன். ஒருவரால் விரும்பப்படுவது பொதுமக்களால் மிகவும் வெறுக்கப்படும்.

யுகேந்திரன் சார், விச்சு மா, பிரதீப் ஆகியோருக்கு எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற அர்ச்சனா மற்றும் மணி அண்ணா. பிக்பாஸ் மேடை ஒரு வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தளம், ஆனால் நான் இதுவரை சந்தித்த மிக நச்சு சூழலில் இதுவும் ஒன்றாகும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: