பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று விசித்ரா – ஜோவிகா விஜயகுமார் இடையே நடைபெற்ற படிப்பு தொடர்பான மோதலுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்றுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா தான் 9-ம் வகுப்பு படித்தபோது படிப்பு வரவில்லை என்பதால் நின்றுவிட்டேன் என்று சொல்ல, ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஏன் படிப்பை நிறுத்திவிட்டாய் என்று அட்வைஸ் செய்ய தொடங்கினர். இதில் நடிகை விசித்ரா என்ற கஷ்டமாக இருந்தாலும் பேசிக் கல்வி 12-ம் வகுப்பு வரை படித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார்.
அவர் சொல்லும்போது ஜோவிகா அதை கண்டுகொள்ளாத நிலையில்,இதுவே இப்போது பெரிய விஸ்வரூபமாக மாறியுள்ளது. தொடர்ந்து நேற்றைய எபிசோட்டில், விசித்ரா ஜோவிகா இடையேயான கல்வி தொடர்பான மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசித்ரா ஆவேசமான ஜோவிகாவிடம், எங்க தமிழில் எழுதி காண்பிடி பார்ப்போம் என்று கூறியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் பேசும் தொகுப்பாளர் கமல்ஹாசன், ஜோவிகாவிடம் நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்கிறார். தொடர்ந்து விசித்ராவின் இன்டன்ஷன் தப்பில்லை என்று சொல்லும் கமல்ஹாசன், இது ஒரு ஜென்ரேஷன் இடைவெளி. வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டும் உயிரை கொடுத்தேனும் கல்வி முக்கியமில்லை என்று நினைக்கிறவன் நான்.
குறைகளை சொல்லும்போது உடனே ஏற்று்ககொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் இருக்காது கற்றல் விதி இருக்கலாம் ஆனால் கற்றல் வதை இருக்கவே கூடாது என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில, கமல்ஹாசன் யாருக்கு ஆதரவாக பேசுகிறார் என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“