நீங்க சொன்னதை நான் பார்த்தேனே... நா புரிய வைக்கட்டுமா? கமலிடம் சிக்கிய நிக்சன்

நீ யாரா வேணா இருந்துட்டு போ மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுப்பேன் இல்லனா அவ்வளவுதான் என்று விசித்ராவிடம் கூறிய நிக்சன், ஐஷூ வெளியில போனது உங்களால தான் என்று கூறியுள்ளார்.

நீ யாரா வேணா இருந்துட்டு போ மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுப்பேன் இல்லனா அவ்வளவுதான் என்று விசித்ராவிடம் கூறிய நிக்சன், ஐஷூ வெளியில போனது உங்களால தான் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nixen Vichthra

பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் இன்று

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் மரியாதை கிடைப்பதில்லை என்ற போட்டியாளர்களின் கருத்துக்கு கமல்ஹாசன் தற்போது பதில் கொடுத்துள்ளார்.

Advertisment

கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். இதில் அவ்வப்போது ஒருவர் குறித்து மற்றொருவர் புரளி பேசுவதும், ஆக்ரோஷமாக சண்டை போடுவதும் என் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்துள்ளனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விசித்ரா தன்னை யாரும் மரியாதை கொடுத்து அழைப்பதில்லை என்றும், என்று கூறியதை தொடர்ந்து மாயா அன் கோ இனிமேல் நாங்கள் உங்களை மேம் என்று அழைக்கிறோம் நீங்களும் அதேபோல் மாயா மேம், பூர்ணிமா மேம் என்று கூப்பிடுங்கள் என்று கூறியிருந்தனர். அதேபோல் கடந்த வாரம் ஐஷூ வெளியேறியது குறித்து விசித்ராவிடம் நிக்சன் சண்டை போட்டார்.

இதில் நீ யாரா வேணா இருந்துட்டு போ மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுப்பேன் இல்லனா அவ்வளவுதான் என்று விசித்ராவிடம் கூறிய நிக்சன், ஐஷூ வெளியில போனது உங்களால தான் இப்போது அர்ச்சனா கெட்டுப்போனதும் உங்களால தான் என்று சொல்ல, அர்ச்சனா இப்போ நான் என்ன கெட்டுப்போய்ட்டேன் அதை நீ பார்த்த என்று கேட்ட அர்ச்சனா ஐஷூ உன்கூட இருந்ததால் தான் அவளால் எதுவும் செய்ய முடியாமல் வெளியில் போனாள் என்ற சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதன் காரணமாக மோதல் அதிகரித்துள்ள நிலையில், இன்று தொகுப்பாளர் கமல்ஹாசன், இது குறித்து விசாரிக்கிறார். இதில் விசித்ரா பேசும்போது நிக்சன் சார் என்று சொல்ல, நான் மேம் என்று கூப்பிடுவதால் இனிமேல் என்னை நிக்சன் சார் என்று கூப்பிடுங்கள் என்று நிக்சன் சொன்னதாக கூறிய விசித்ரா ஐஷூ வெளியில் போனதற்கு நான் தான் காரணம் என்று சொல்லிகிறார் என்று கூறினார்.

இதை கேட்ட கமல்ஹாசன் அப்படி சொன்னீங்கா என்று கேட்க, நான் அப்படி சொல்லவில்லை என்று நின்சன் சொல்ல, நீங்க சொன்னீங்க நான் அதை பார்த்தேன் என்று கமல் சொல்கிறார். இத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: