/indian-express-tamil/media/media_files/Ji437mLWoRYtDBbfcZb6.jpg)
மாயா - நிக்சன்- பூர்ணிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருக்கும் நிலையில், அவருக்கு சோதனை தரும் விதமாக பிக்பாஸ் வீட்டில் லிவிங் ஏரியாவில் மணி வைக்கப்பட்டுள்ளது. இதை அடித்து ஹவுஸ்மெட்ஸ் நியாயம் கேட்கலாம் என்று கூறியுள்ளார் பிக்பாஸ்
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் என்று அறிவித்த பிக்பாஸ் 3 டாஸ்க்கள் டாக்ஸ்கள் கொடுத்திருந்தார்.
இந்த 3 டாஸ்க்களும் முடிந்து தற்போது போட்டியாளர்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டனர். இதில் மாயா – விசித்ரா எதிர் எதிர் துருவங்களாக இருந்த நிலையில், தற்போது இணைந்துவிட்ட நிலையில், விசித்ராவுக்கும் அர்ச்சனாவும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதனிடையே சென்ற வாரம், விஜய் வர்மா ரீ-என்டரி கொடுத்த நிலையில், ஆர்.ஜே.பிராவோ வெளியேற்றப்பட்டார். மேலும் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு கமல்ஹாசன் கடுமையாக கண்டித்திருந்தார்.
இதனிடையே இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் பிக்பாஸ், லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. இந்த வார கேப்டனாக நிக்சனின் நிர்வாகத்தில் யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது, நியாயம் கேட்டோ இந்த மணியை அடிக்கலாம். புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிக்சனின் பதவி பறிபோய்விடும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.
இதன்பிறகு, மாயா அவனுக்கு தேவை என்றால் அவன் நம்மை கைவிட்டுவிடுவான், நிக்சன் எலிமினேஷன் அதற்கான வேலையை பார்க்கலாம் என்று பூர்ணிமாவிடம் சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us